அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நடிகர் விஷாலுக்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் மோதல் உருவாகி உள்ளது. நடிகர் சங்க பொதுச்செயலாளராக இருக்கும் விஷால், கடந்த வாரம் அளித்த பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடுகளைப் பற்றிக் கடுமையாக விமர்சித்திருந்தார். குறிப்பாக திருட்டு விசிடி விவகாரங்களில் தயாரிப்பாளர் சங்கம் தீவிரம் காட்டவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இது தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நடந்த தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசரக்கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமாக நடிகர் விஷாலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தை தொடர்ந்து விமர்சிக்கும் விஷால் தனது போக்கை மாற்றி கொள்ள வேண்டும். இன்னும் ஒரு வாரத்திற்குள் அவர் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையென்றால் அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் 'கத்திச் சண்டை' படத்திற்குப் பிறகு அவருக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம் என அறிவித்திருக்கிறார்கள்.
ஆனால், விஷால் இதுப்பற்றி எந்த ஒரு பதிலும், விளக்கமும் அளிக்காமல் இருக்கிறார். இதுப்பற்றி விஷால் தரப்பிடம் கேட்டபோது, தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் பற்றி இதுவரை எனக்கு எந்த கடிதமும் வரவில்லை. முறைப்படி கடிதம் வந்ததும் நான் விளக்கம் அளிப்பேன் என்று கூறியுள்ளார்.