மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் டி.இமான் இசையமைப்பில் சுதீப், நித்யா மேனன் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளியான படம் 'முடிஞ்சா இவன புடி'. இப்படம் கன்னடத்திலும் தயாரிக்கப்பட்டு அங்கு 'கோட்டிகொப்பா 2' என்ற பெயரில் வெளியானது. கன்னட நடிகரான சுதீப்புக்கு அங்கு மிகப் பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. அவர்களை இந்தப் படம் வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதனால் படம் வெளியான நான்கு நாட்களிலேயே கர்நாடகாவில் சுமார் 22 கோடி ரூபாயை இந்தப் படம் வசூலித்தது. பெங்களூருவில் மட்டும் சுமார் 6 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்த வசூல் தொகையையும் கர்நாடக வினியோகஸ்தர்கள் அறிவித்துள்ளார்கள்.
நேற்று கர்நாடகாவின் 7 ஏரியாக்களையும் சேர்ந்த 6 வினியோகஸ்தர்கள் மற்றும் சுதீப் உட்பட படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். படம் வெளியான முதல் நான்கு நாட்களிலேயே சுமார் 22 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஒரு படத்தின் வினியோகஸ்தர்கள் சேர்ந்து படத்தின் வசூல் பற்றிய விவரங்களைத் தெரிவித்துள்ளது இதுதான் முதல் முறை என சாண்டல்வுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழிலும் தேவையற்ற தடைகளை ஏற்படுத்தாமல் இருந்திருந்தால் அங்கும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கம் என சுதீப் வருத்தத்துடன் கூறியுள்ளார். இதனிடையே ரஜினிகாந்த் இந்தப் படத்தை இன்று சென்னையில் பார்க்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.