தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் நீலத்தாமரை என்ற படத்தில் அறிமுகமான அமலாபால், தமிழில் விகடகவி -என்ற படத்தில் நாயகியானார். பின்னர் வீரசேகரன், சிந்து சமவெளி படங்களில் நடித்தார். இதில் சிந்துசமவெளி படத்தில் சொந்த மாமனாருடன் தவறான உறவு வைத்திருக்கும் பெண்ணாக நடித்து சர்ச்சையில் சிக்கினார். ஆனால் அதையடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் அமலாபால் நடித்த மைனா படம் அவருக்கு ஹிட்டாக அமைந்ததோடு, அவர் மீது நல்லதொரு இமேஜையும் ஏற்படுத்தியது. அதனால் அடுத்தடுத்து விஜய், விக்ரம் என்று நடித்து முன்னணி ஹீரோயினியானவர். டைரக்டர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், ஓராண்டு சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில், திருமணத்திற்கு பிறகும் அமலாபால் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்ததால் ஏ.எல்.விஜய்யின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கேரளாவிலுள்ள தனது தாய்வீட் டிற்கு சென்ற அமலாபால், கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்தபடி தமிழ், மலையாள படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது ஏ.எல்.விஜய்யும், அமலாபாலும் விவாகரத்துக்கு நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இந்நிலையில், தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வட சென்னை படத்தில் நடித்து வரும் அமலாபால், அடுத்தபடியாக புதிய படங்களில் நடிப்பதற்கான முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறார். ஆனால், அவர் டைரக்டர் ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்யப்போகிறார் என்ற தகவல் வெளியானதை அடுத்து அவருக்கு சான்ஸ் தருவதாக கூறியிருந்த டைரக்டர்களே இப்போது தயங்கி நிற்கிறார்களாம். இதனால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக விவாகரத்துக்கு தயாரான அமலாபால், இப்போது சினிமா வாய்ப்புகளே கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதால் கடும் அதிர்ச்சிக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.