அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கோழிக்கூவுது படத்திற்கு இசையமைத்தவர் ஈ.எஸ்.ராம். தற்போது ராமகிருஷ்ணன் நடித்துள்ள ஒரு கனவு போல -என்ற படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிம்பு வெளியிட்ட பீப் சாங்கிற்கு எதிராக, பெண்களை போற்றி பாடும் சூழலில் அமைந்த ஒரு பாடலுக்கு தான் இசையமைத்திருப்பதை பெருமையாக சொல்கிறார் அவர்.
அதுகுறித்து ஈ.எஸ்.ராம் மேலும் கூறுகையில்,
ஒரு கனவு போல- நட்பின் ஆழத்தை சொல்லும் படம். உளவியல் சம்பந்தப்பட்ட கதையில் இந்த படம் உருவாகியுள்ளது. பாரதிகண்ணம்மா, மறுமலர்ச்சி, சந்தோஷ் சுப்ரமணியம் என பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய விஜயசங்கர் டைரக்ட் செய்துள்ளார். ராமகிருஷ்ணன்-செளந்தர் இருவரும் நண் பர்களாக நடித்துள்ளனர்.
மேலும், இந்த படத்தில் இப்போதைய இளைஞர்களின் ரசனைக்கேற்ற சில பாடல்கள் இருந்தபோதும், பெண்களை போற்றும் வகையில் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது. வானுக்கும் மண்ணுக்கும் பேதமில்லை, எங்கிலும் பெண் உருவம் -என்று தொடங்கும் அந்த பாடலை புலவர் புலமைப்பித்தன் எழுதியுள்ளார். ஒரு காலத்தில் கிராமப் புறங்களில் சுமங்கலி பெண்களை கடவுளாக வழிபடும் வழக்கம் இருந்து வந்தது. அப்படி சுமங்கலி பெண்ணை தெய்வமாக வழிபடும் காட்சி இந்த படத்தில் உள்ளது. அந்த சூழலில்தான் இப்படியொரு புதுமையான பாடல் இடம்பெற்றிருக்கிறது.
நானும் பாடலுக்கான சூழலை உணர்ந்து மனதை தொடும் வகையில் இசைய மைத்திருக்கிறேன். கண்டிப்பாக இந்த பாடல் தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைக்கொடுக்கும். அதோடு, எனக்கும் நல்லதொரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன். முக்கியமாக, பீப் சாங் பெண்களை திட்டி எழுதப்பட்டிருந்தது. அதனால் அதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. ஆனால், இந்த பாடல் பெண்களை போற்றி எழுதப்பட்டிருக்கிறது. அதனால், அனைத்துதரப்பில் இருந்தும் இந்த பாடலுக்கு நல்லதொரு வரவேற்பு கிடைக்கும். இந்த பெண்மை பாடலில் நேட்டிவிட்டி கலந்த இசைக்கருவிகளை பயன்படுத்தியிருக்கிறேன். அதனால் கேட்போர் மனதை உருக்கும் வகையில் இந்த பாடல் உருவாகியிருக்கிறது.
மேலும், என்னதான் கமர்சியல் கலந்த பாடல்கள் என்றாலும் அதிலும் ஒரு தரம் இருக்க வேண்டும் என்பதில் நான் கவனமாக இருக்கிறேன். குறிப்பாக குத்துப் பாடல்களிலும் தரம் வைப்பேன். ஏனோதானோ என்று செயல்படாமல் ரசிகர் களுக்கு நல்ல தரமான இசையை கொடுக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு செயல்படுகிறேன். சமீபகாலமாக, பாடல்கள் ரசிகர்களைப்போய் எளிதில் சேர வேண்டும் என்பதற்காக ஹீரோக்களையே பின்னணி பாட வைக்கிறார்கள். அதனால் எதிர்காலத்தில் நானும் எனது படங்களில் நடிக்கும் ஹீரோக்களை பாட வைப்பேன் என்று கூறும் இசையமைப்பாளர் ஈ.எஸ்.ராம், ஒரு கனவு போல படத்தைத் தொடர்ந்து வீரத்திருவிழா, தத்துவமதி உள்ளிட்ட சில படங்களுக் கும் இசையமைத்து வருகிறாராம். அதோடு, கோழிக்கூவுது படத்தில் மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களை எனது இசையில் ஒரு பாடல் பாட வைத்தேன். அவர் என் இசையில் பாடியதை நான் பெற்ற பெரும் பாக்கியமாக கருதுகிறேன். அதேபோல், இந்த படத்தில் பெண்மையை போற்றும் பாடலை புலவர் புலமைப்பித்தன் எழுதியதையும் பெருமையாக கருதுகிறேன் என்கிறார்.