தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பல படங்களில் வில்லனாக நடித்தபோதும், அவ்வப்போது சில படங்களில் குணசித்ர வேடங்களிலும் நடித்து வருபவர் கிஷோர். அந்த வகையில், வம்சம், திலகர் உள்ளிட்ட சில படங்களில் நடித்த கிஷோரை ஹீரோவாக நடிப்பதற்கு சிலர் அழைப்பு விடுத்து வந்தனர். ஆனால் அப்படி நடித்தால் தான் போராடி பிடித்த வில்லன் இடம் போய் விடும் என்று தொடர்ந்து மறுத்து வந்தார். இருப்பினும் களத்தூர் கிராமம் என்றொரு படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு ஒத்துக்கொண்டார் கிஷோர்.
ஆனால் பல மாதங்களுக்கு முன்பே படப்பிடிப்பு முடிந்து விட்ட அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இதனால் அந்த படம் வந்தால் அடுத்தபடியாக பெரிய டைரக்டர்களின் படங்களில் ஹீரோ வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த கிஷோருக்கு இப்போது மனதளவில இருந்து வந்த ஹீரோ ஆசை சுத்தமாக போய் விட்டதாம். முக்கியமாக, ரஜினியுடன் நடித்த கபாலி படத்திற்கு பிறகு தனது வில்லன் மார்க்கெட் இன்னும் சூடு பிடித்திருப்பதால், அடுத்தபடியாக குணசித்ர வேடங்களில்கூட பெரிதாக ஆர்வம் இல்லாமல், அதிரடி வில்லன் வேடங்களாக தேடிப்பிடித்து கமிட்டாகி வருகிறார் கிஷோர். சில மெகாப்பட டைரக்டர்களின் படங்கள் புக்காகியிருப்பதால், பரபரப்பான வில்லனாகிக்கொண்டிருக்கிறார் அவர்.