ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிவகார்த்திகேயனின் நண்பர் பெயரில் தொடங்கப்பட்ட 24 ஏஎம் ஸ்டுடியோஸ்' நிறுவனத்தின் முதல் தயாரிப்பான 'ரெமோ' படம் திரைக்கு வரத்தயாராகிவிட்டது. பாக்யராஜ் கண்ணன் இயக்கதில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் இப்படம் அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது.
அனிருத் இசை அமைக்கும் ரெமோ படத்தில், 'சிரிக்காதே...' என்று துவங்கும் விளம்பரப் பாடலை நாளை மறுநாள் (ஆகஸ்ட்-18) வெளியிட உள்ளனர். மியூசிக் வீடியோவாக இந்தப்பாடல் வெளியிடப்பட உள்ளது. இன்னொரு பக்கம் ரெமோ படத்தின் வியாபாரமும் சூடு பிடித்துள்ளது. திருப்பூர் சுப்பிரமணியம், மதுரை அழகர் என பெரிய பெரிய ஆட்களிடம் ஏற்கெனவே இப்படத்தின் தமிழக விநியோக உரிமை விற்கப்பவிட்டது.
இந்நிலையில் இப்போது இப்படத்தின் கேரள விநியோக உரிமையும் விற்கப்பட்டுள்ளது. இதை தயாரிப்பு தரப்பினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
'ரெமோ' படத்தை கேரளம் முழுக்க வெளியிடும் உரிமையை பெற்றவர் யார் தெரியுமா? விஜய்யின் 'புலி' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீன் தான் வாங்கியுள்ளார். தற்போது விக்ரம் நடிப்பில் 'இருமுகன்' படத்தை தயாரித்து வருபவரும் இவர் தான். ரெமோவை இவர் வாங்கியதால் தான், ஷிபு தமீன் தயாரித்துள்ள 'இருமுகன்' பாடல்கள் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார்.