ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நேற்று நாடு முழுவதும் நமது இந்திய திருநாட்டின் 70வது சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக தங்கள் சுதந்திரதின வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர். ஆனால் மற்றெந்த நடிகர்களையும் விட ஒருபடி மேலாகவே இந்த சுதந்திர தினத்தை பள்ளிக்குழந்தைகள் முன்னிலையில் தேசியக்கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடி இருக்கிறார் மோகன்லால்.
தற்போது 'வெள்ளிமூங்கா' பட இயக்குனர் ஜிபு ஜேக்கப் இயக்கத்தில் 'பிரயோபனிஷத்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் மோகன்லால். கோழிக்கோடு அருகில் இதன் படப்படிப்பு நடைபெற்று வருகிறது.. இந்தப்படப்பிடிப்பு தளத்திற்கு அருகே உள்ள திடலில் நேற்று பள்ளிக்குழந்தைகள் மற்றும் ஊர் மக்கள் முன்பாக தேசிய கொடியேற்றி மரியாதை செய்தார். பின்னர் அங்கிருந்த குழந்தைகளுக்கு தன கைப்படவே இனிப்புகளை வழங்கி அவர்களை மகிழ்வித்தார்.
மோகன்லாலுக்கு சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு கௌரவ ராணுவ கர்னல் பதவியை வழங்கி கௌரவப்படுத்தியது. இதனால் மோகன்லாலும் அவ்வப்போது ராணுவம் மற்றும் அரசு சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்துகொண்டு வறுகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.