துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
தமிழ் சினிமாவில் டாப் 10 இயக்குனர்களை பட்டியலிட்டால் அதில் கண்டிப்பாக ருத்ரய்யாவிற்கு இடம் உண்டு. அவர் இயக்கிய 'அவள் அப்படித்தான்' என்கிற ஒரே படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. சுதந்திர வேட்கையும், துணிச்சலும் கொண்ட ஒரு பெண் தன் வாழ்க்கையில் சந்திக்கும் விதவிதமான ஆண்களைப் பற்றிய கதை. ஆனாலும் அவள் தன் போக்கில் தன் வாழ்க்கையை தொடருவாள்.
அந்தப் பெண் மஞ்சுவாக ஸ்ரீப்ரியா நடித்திருந்தார். ரஜினி, கமல் அவர் வாழ்வில் வரும் ஆண்களாக நடித்திருந்தார்கள், இளையராஜா இசை அமைத்திருந்தார். 1978ம் ஆண்டு இந்தப் படம் வெளிவந்து பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மிகப்பெரிய வெற்றியும் பெற்றது.
தமிழ் சினிமாவில் ஆச்சர்யமான மனிதர்களில் ருத்ரய்யாவும் ஒருவர். 'அவள் அப்பபடித்தான்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் 'கிராமத்து அத்தியாயம்' என்ற படத்தை இயக்கினார். இளையராஜா பிரமாதமான பாடல்களை போட்டிருந்தார். அதில் புதுமுகங்கள் நடித்திருந்தனர்.
முதன் முதலாக ஒரு இயக்குனருக்கு தியேட்டரில் ஓப்பனிங் கிடைத்தது என்றால் அது ருத்ரய்யாவுக்குத்தான், 'அவள் அப்படித்தான்' இயக்குனர் இயக்கிய படம் என்று மக்கள் கூட்டம் எதிர்பார்ப்போடு தியேட்டருக்கு படையெடுத்து சென்றார்கள். மூன்றாவது ரீலிலேய தியேட்டரை விட்டு வெளியே வந்தார்கள். இது ருத்ரய்யா படமே இல்லை என்றார்கள். அந்த அளவிற்கு மோசமாக இருந்தது அந்தப் படம்.
கிராமத்து அத்தியாயத்திற்கு பிறகு கமலஹாசன், ஸ்ரீப்ரிய நடிக்க 'ராஜா என்னை மன்னித்துவிடு' என்ற படத்தை இயக்குவதாக இருந்தார் ஆனால் அந்தப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன் பிறகு நீண்ட காலம் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்த ருத்ரய்யா மீண்டும் 'அவள் அப்படித்தான்' இரண்டாம் பாகத்தை எடுக்கப் போகிறேன் என்று ஸ்கிரிப்டோடு கமல் வீட்டுக்கும், ரஜினி வீட்டுக்கும் நடந்தே செத்துப்போனார். ஒரு அற்புதமான படத்தை கொடுத்த ருத்ரய்யாவால் ஏன் இன்னொரு படம் கொடுக்க முடியவில்லை என்பது இன்று வரை பதில் தெரியாத கேள்வியாகவே இருக்கிறது.