ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
சசிகுமார் நடித்த வெற்றிவேல் படத்தில் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகை நிகிலா. அதே படத்தில் அமரகாவியம், இன்று நேற்று நாளை, ஒருநாள் கூத்து படங்களில் நடித்த இன்னொரு மலையாள நடிகையான மியாவ் ஜார்ஜூம் நடித்திருந்தார். என்றபோதும் நிகிலாவின் இயல்பான நடிப்பு பேசும்படியாக இருந்ததால் கிடாரி படத்திலும் அவரையே நாயகியாக்கிவிட்டார் சசிகுமார். முதல் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்த நிகிலா, கிடாரியில் சிங்கிள் நாயகியாக நடித்துள்ளார்.
குறிப்பாக, சசிகுமாரின் சுந்தரபாண்டியன், குட்டிப்புலி படங்களில் லட்சுமிமேனன் நடித்தது போன்ற வெயிட்டான நாயகி வேடத்தில் இந்த படத்தில் நடித் துள்ளார் நிகிலா. அதோடு, மற்ற நடிகைகளெல்லாம் மலையாளமும், தமிழும் கலந்து பேசி வரும் நிலையில், நிகிலாவோ தமிழில் சுத்தமாக பேசுகிறார். அதனால், கிடாரியில் அவரது பர்பாமென்ஸ் பேசப்பட்டு வரும் வேளையில், அவர் நன்றாக தமிழ் பேசக்கூடிய நடிகை என்கிற சேதியும் கோலிவுட்டில் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் தமிழ் பேசும் நடிகையாக தேடி வந்த சில டைரக்டர்கள் தற்போது நிகிலாவை சந்தித்து கதை சொல்லி வருகிறார்கள். அவர்களிடம் மலையாள வாசனையோ, ஆங்கில வார்த்தைகள் கலந்தோ பேசாமல் அழகான தமிழில் பேசி அசத்துகிறாராம் நிகிலா.