'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கேரளாவைப் பொறுத்த வரை தமிழ் நடிகர்கள் பலருக்கும் பிஸினஸ் வேல்யூ நன்றாகவே இருக்கிறது என்பது தெரிந்த விஷயம். அதேசமயம் 'கபாலி' படம் அதிக தியேட்டர்களில் ரிலிசாகும் அளவிற்கு ரஜினியின் தாக்கம் அங்கே அதிகமாக இருந்தாலும் கூட, எல்லா இடங்களிலும் பரவலான அளவில் அதிகப்படியான ரசிகர்களை கொண்ட தமிழ் நடிகர் என்றால் அது விஜய் தான். இது கேரளாவில் ஒவ்வொரு முறையும் விஜய் பட ரிலீஸின் போதும், பல்வேறு நிகழ்வுகளிலும் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது பாலக்காடு உதவி கலெக்டர் உமேஷ் கேசவனும் விஜயின் பாப்புலாரிட்டி எந்த அளவிற்கு ரீச்சாகியுள்ளது என்பதை நேரில் கண்டு அசந்துள்ளார்.
சமீபத்தில் கேரளாவில் பாலக்காடு அட்டப்பாடிபகுதியில் உள்ள மலை அடிவாரங்களில் வசிக்கும் ஆதிவாசிகளை சந்தித்து அவர்களது குறை நிறைகளை கேட்பதற்காக சென்றிருந்தார் உதவி கலெக்டர் உமேஷ் கேசவன். அப்போது அங்கு அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உதவி கலெக்டர் அங்கே பலரது வீடுகளில் தொலைக்காட்சி இருப்பதை கண்டு ஆச்சர்யமும் அடைந்தார். அங்கிருந்த இளைஞர்களை அழைத்து, விசாரித்த பொழுது அவர்களின் பிரதான பொழுதுபோக்கே, விஜய் படங்களை பார்ப்பது தான் என்றும் அங்குள்ள பலரும் விஜய் ரசிகர்கள் தான் என்பதையும் அறிந்து ஆச்சரியப்பட்டுள்ளார். இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் விரிவாக குறிப்பிட்டுள்ள உதவி கலெக்டர், “வெளிநாட்டிலுள்ள தொண்டு நிறுவனங்களிலிருந்து அனுப்பப்படும் நிதி இவர்களை சென்றடைகிறதோ இல்லையோ, அனைவரிடமும் நடிகர் விஜய் ரீச்சாகியிருக்கிறார் என்பது ஆச்சர்யம்தான்” என வியப்புத் தெரிவித்துள்ளார்.