இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கடந்த வாரம் மோகன்லால் தெலுங்கில் நடித்து 3 மொழிகளில் வெளியான படம் தான் 'மனமந்தா'. இது மலையாளத்தில் 'விஸ்மயம்' என்றும். தமிழில் 'நமது' என்றும் வெளியானது. இது மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டாலும் ப்ப்ளிசிட்டி மற்றும் வெளியீடு வரையிலான செலவுகள் எல்லாம் சேர்த்து மொத்தமே 14 கோடி பட்ஜெட்டில் அடங்கியது. தெலுங்கில் நன்றாகவும், தமிழில் சுமாராகவும் வசூலித்து வரும் இந்தப்படம், கடந்த பத்து நாட்களில் கேரளாவில் மட்டும் 3 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
தற்போது இன்னொரு மகிழ்ச்சியான செய்தியாக 'விஸ்மயம்' படத்தின் சாட்டிலைட் உரிமையை ஆசியாநெட் மலையாள சேனல் 6.8 கோடி ரூபாய் விலை கொடுத்து கைப்பற்றியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதுதவிர தமிழிலும் முக்கிய சேனல் ஒன்று இதன் சாட்டிலைட் உரிமையை விலைபேசி வருகிறது. தெலுங்கில் ஏற்கனவே மா டி.வி 'மனமந்தா' படத்தின் உரிமையை வாங்கி விட்டதாக சொல்லப்படுகிறது.. அந்த வகையில் படத்தின் வசூலை லாபமாக்கி, சாட்டிலைட் உரிமையிலேயே படத்தின் மொத்த பட்ஜெட்டையும் தயாரிப்பாளர் கைப்பற்றி விட்டார் என தாராளமாக சொல்லலாம்..