600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
தமிழில் 'யாருடா மகேஷ்' படத்தில் நடித்தவர் சந்தீப் கிஷன். பக்கா சென்னை பையன். ஆனால் 'யாருடா மகேஷ்' வெற்றி பெறாததால் தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தவர் அங்கு முன்னணி நடிகர் ஆகிவிட்டார், 'ஷோர் இன் தி சிட்டி' என்ற பாலிவுட் படத்தில் நடித்து அதுவும் ஹிட்டாகி விட்டது. சொந்த மண்ணில் ஜெயிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. தற்போது 'மாயவன்' படத்தில் நடித்து வருகிறார். அதன் மூலம் தமிழில் நல்ல இடம் கிடைக்கும் என்று நம்புகிறார்.
தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கும் 'மாயவன்' படத்தில் கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதற்காக உடல் எடையை அதிகரித்து முறுக்கு மீசை வளர்த்து நடிக்கிறார். ஹீரோயின் லாவண்யா மனநல மருத்துவராக நடித்துள்ளார். பன்ஞ் டயலாக் பேசி ஒன்ட்றை டன் வெயிட்டில் அடித்து ஹீரோயிசம் பண்ணாமல் யதார்த்தமான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இது தவிர தமிழ், தெலுங்கில் தயாராகும் 'மாநகரம்' படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழில் நடிக்க நல்ல கதைகளை தேடிக் கொண்டிருக்கிறார்.