மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழ் மக்களின் வழக்கப்படி திருமணத்திற்குக் கூட செல்கிறோமோ இல்லையோ, ஆனால், ஒருவரது மரணத்திற்குக் கண்டிப்பாகச் சென்று இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும் என்று சொல்வார்கள். தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் அந்த வழக்கம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. திரையுலகம் என்பது ஒரு குடும்பம்தான், அங்கே தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள், நடிகர்கள், நடிகைகள் என பலதரப்பட்டவரும் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு துறையைச் சேர்ந்தவர்கள் இறந்தால், அவர்களுடன் பழக்கமானவர்கள் மட்டுமே சென்று இறுதி அஞ்சலி செலுத்தும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். மற்றவர்கள் நமக்கென்ன என வழக்கம் போல டிவிட்டரில் எதையாவது ஒரு புகைப்படத்தையோ செய்திகளையோ போட்டு அந்த துக்கத்தைக் கூட பகிர்ந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.
நேற்று அகால மரணமடைந்த நா.முத்துக்குமாரின் மரணத்திற்கு விஜய், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சில நடிகர்களும், ஷங்கர், பாண்டிராஜ், வெற்றிமாறன், ராம், திரு, வசந்தபாலன், 'ஈட்டி' ரவிஅரசு உள்ளிட்ட சில இயக்குனர்களும், யுவன்ஷங்கர் ராஜா, தேவா, எஸ்ஏ ராஜ்குமார், தீனா போன்ற ஒரு சில இசையமைப்பாளர்களும், வைரமுத்து, பா.விஜய், சினேகன், பிறைசூடன், விவேகா, முத்துவிஜயன் உள்ளிட்ட சில பாடலாசிரியர்கள் மட்டுமே இறுதி அஞ்சலி செலுத்த வந்தனர். வயது முதிர்ந்து ஒருவர் மரணமடைந்திருந்தால் கூடப் பரவாயில்லை, வாழ வேண்டிய வயதில் மரமணடைந்துவிட்டாரே என நா.முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் சென்ற பாதையில் அவருடைய பாடல்களை ரசித்த பலர் பேசியதைக் கேட்க முடிந்தது.
மற்ற நடிகர்களை விடவும் நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட கவுண்டமணி காலையிலேயே நா.முத்துக்குமாரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்தார். இத்தனைக்கும் முத்துக்குமார் , கவுண்டமணி நடித்த படங்களுக்கு வேண்டுமானால் பாடல்களை எழுதியிருக்கலாமே தவிர கவுண்டமணிக்காக எந்தப் பாடலையும் எழுதியதில்லை. அது போலவே கடந்த வாரம் பஞ்சு அருணாச்சலம் மறைந்த போதும் கவுண்டமணி வந்து அஞ்சலி செலுத்தினார். சக கலைஞர்களை இருக்கும் போது வாழ்த்துவதைவிட அவர்கள் மறைந்த பின் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது சிறந்தது என கவுண்டமணி போன்றவர்கள் உணர்ந்திருப்பதை மற்றவர்களும் எப்போது உணர்வார்களோ...?