தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கே.பாக்யராஜ் மகன் சாந்தனு நடிக்கும் படம் வாய்மை. முக்தா பானு, கவுண்டமணி, கே.பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.செந்தில்குமார் இயக்கி உள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார் இயக்குனர் பா.ரஞ்சித் பெற்றுக் கொண்டார்.
விழாவில் ரஞ்சித் பேசியதாவது: வாய்மை படம் ஒரு சமூக முரண்பாட்டை பேசுகிறது. இந்த சமுதாயத்தில் ஒருவன் வாய்மையுடன் வாழ முடியுமா என்று கேள்வியை எழுப்புகிறது. முதல் படத்திலேயே இப்படி ஒரு துணிச்சலாக கருத்தை சொல்கிறார் இயக்குனர். எப்போதுமே சமூக முரண்பாடுகளை படமாக்கும்போது பிரச்சினைகள் வரும். அதை சந்தித்துதான் ஆக வேண்டும். இது நம்ம ஆளு படத்தின்போது பாக்யராஜ் சாரும் பல பிரச்சினைகளை சந்தித்தார். அது சமூக முரண்பாட்டை பேசிய படம். இப்போது கபாலியால் நானும் பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன். இது தவிர்க்க முடியாதது. நமது வேலை கலையை உருவாக்குவது. அதன் மூலம் மக்களுக்கான சமூகத்தை, அரசியலை பேசுவது. அதை செய்துவிட்டு போவோம். விமர்சிக்கிறவர்கள் விமர்சித்துக் கொண்டே இருக்கட்டும். என்றார்.