ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த மாதம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவு பார்ட்டியில் போதை தலைக்கேற குடித்து விட்டு காரோட்டி வந்த தொழிலதிபர் மகளால் திருவான்மியூரைச் சேர்ந்த அப்பாவி கார்பெண்டர் முனுசாமி என்பவர் உயிர் இழந்தார். அவரது மனைவி கோவிந்தம்மாள், ஆனந்த் என்கிற மகன், திவ்யா என்ற மகள் ஆகியோர் முனுசாமியின் வருமானத்தில்தான் வாழ்ந்து வந்தார்கள். இப்போது அவர்கள் நடுத்தெருவிற்கு வந்திருக்கிறார்கள். முனுசாமியின் குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம்கூட கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளனர்.
இதனை அறிந்த விஷால் முனுசாமியின் மகன் மற்றும் மகளின் படிப்பு செலவை ஏற்பதாக அறிவித்துள்ளார். அவர் தன் தயா£ர் பெயரில் நடத்தி வரும் தேவி அறக்கட்டளை மூலம் இந்த கல்வி உதவி அளிக்கப்படுகிறது. இதேபோன்று தற்போது கத்தி சண்டை படப்பிடிப்பில் இருக்கும் விஷால். படப்பிடிப்பின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த போட்டோ பிளேட் செல்வம் என்பவரின் மகன்கள் சந்தோஷ், ஆகாஷ் ஆகியோரின் படிப்பு செலவையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.