டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலக்காடு மாவட்ட துணை ஆட்சியர் உமேஷ் என்பவர் தனது டுவிட்டரில், கேரளாவிலுள்ள அட்டப்பாடி என்ற கிராமத்து மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்வதோடு, கல்வி அறிவு, அரசின் நலத்திட்டங்களை பெறுவது எப்படி என்பது கூட தெரியாமல் விழிப்புணர்வு இல்லால் வாழ்ந்து வருவதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் விஜய்யின் ரசிகர்களாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், விஜய் அவர்களை சந்தித்து பேசினால் அவர்கள் விழிப்புணர்வு அடைய வாய்ப்புள்ளது என்றும் அவர் கருத்து கூறியிருந்தார்.
அதையடுத்து இந்த செய்தியை அவர் கேரளாவிலுள்ள விஜய் ரசிகர் மன்றங்கள் மூலமாக சென்னையிலுள்ள தலைமை ரசிகர் மன்றத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார். பின்னர் விஜய்க்கு தகவல் சென்றதும், நேற்று அவர் துணை ஆட்சியர் உமேஷை அழைத்து சந்திப்பு நடத்தியுள்ளார். அப்போது அந்த அட்டப்பாடி கிராமத்தைப்பற்றி முழுமையாக கேட்டறிந்துள்ளார் விஜய். இந்த சந்திப்பை அடுத்து கேரளாவிலுள்ள அந்த அட்டப்பாடி கிராமத்துக்கு விரைவில் சென்று அந்த மக்களை விஜய் சந்திப்பார் என்று அவரது ரசிகர் மன்றத்தினர் சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளனர்.