கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
கன்னட சினிமாவில் இருந்து கோலிவுட்டுக்கு வந்தவர்கள் பிரகாஷ்ராஜ், கிஷோர். இவர்களில் பிரகாஷ்ராஜ் கே.பாலசந்தரின் டூயட் படத்தில் தமிழுக்கு வந்தார். கிஷோர் வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தில் வந்தார். அப்படி வந்த அவர்கள் இருவருமே தமிழில் முக்கியமான வில்லன்களாகி விட்டனர். இதில் பிரகாஷ்ராஜ் சமீபகாலமாக இந்தி படங்களிலும் நடிப்பதால் பிசியான நடிகராகி விட்டதோடுஅவரது சம்பளமும் பன்மடங்கு எகிறி விட்டது.
இந்த நிலையில், இதுவரை ரஜினியுடன் நடிக்காத அவரை, முதன்முதலாக கபாலி படத்தில் வில்லனாக நடிக்க வைக்க முயற்சி எடுத்தனர். ஆனால் அவர் கேட்ட சம்பளம் தயாரிப்பாளருக்கு தலைசுற்ற வைத்து விட்டதாம். அதனால்தான் பிரகாஷ்ராஜ்க்கு பதிலாக கிஷோரை கபாலியில் நடிக்க வைத்துள்ளனர். ஆனால் எப்படியும் தான் கேட்ட சம்பளத்தில் தன்னை புக்க பண்ண வருவார் கள் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த பிரகாஷ்ராஜ்க்கு, தனக்கு பதிலாக கபாலி படத்துக்கு கிஷோரை புக் பண்ணி விட்ட தகவல் கிடைத்ததும் செம டென்ச னாகி விட்டாராம்.
அதையடுத்து, கபாலியில் என்னைதான் நடிக்க அழைத்தனர். சம்பளம் பேச்சுவார்த்தை நடக்கிறது. அதற்குள்ளாக எப்படி நீங்கள் கமிட்டாகலாம் என்று பிரகாஷ்ராஜ்தரப்பில் கிஷோரிடம் பேசினார்களாம். அவரோ, உங்களிடம் அவர்கள் பேசியது எனக்கு தெரியாது. ஆனால் ரஜினி எனது பேவரிட் நடிகர். அவருடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. அப்படியொரு அதிர்ஷ்டம் தேடிவரும்போது யாராவது விடுவார்களா? என்று வில்லன் தோரணையில் சொல்லி விட்டாராம் கிஷோர்.