Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வாய்மை பட டைரக்டர் என்னைப்போலவே இருக்கிறார்! -பிரஸ்மீட்டில் கே.பாக்யராஜ் பேச்சு

14 ஆக, 2016 - 08:15 IST
எழுத்தின் அளவு:
k.bhagyaraj-speech-in-the-vaaimai-movie-press-meet

சாந்தனு நாயகனாக நடித்துள்ள படம் வாய்மை. செந்தில்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் கே.பாக்யராஜ், கவுண்டமணி, தியாகராஜன், பூர்ணிமா பாக்யராஜ், மனோஜ், பிருத்வி ஆகியோர் நடித்துள்ளனர். விரைவில் திரைக்கு வரும் இந்த வாய்மை படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது படக்குழுவினர் மட்டுமின்றி, கே.பாக்யராஜ், எஸ்.தாணு, டைரக்டர் பா.ரஞ்சித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


அப்போது கே.பாக்யராஜ் பேசுகையில்,


இந்த படத்தை இயக்கியுள்ள செந்தில்குமார் என்னை இந்த பிரஸ்மீட்டிற்கு திடீரென்று அழைத்தபோது என்னால் மறுக்க முடியவில்லை. நானே வராமல் போனால் படம் சரியில்லை போல அதனால்தான் பாக்யராஜே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பார்கள். அதனால் தான் வெளியூரில் இருந்து விழுந்தடித்து ஓடிவந்தேன்.


இந்த படத்தின் கதையை இதுவரை டைரக்டர் சொல்லவில்லை. என் மகன் ஹீரோ என்பதால் அவரிடம் சொல்லியிருப்பார். எனது மனைவியும் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். ஆனால் அவரும் இதுவரை கதை சொல்லவில்லை என்றுதான் சொல்கிறார். என்னை ஒரேயொரு நாள் மட்டும் நடிக்க வைத்தார். அந்த காட்சிகளுக்கு 3 நாள் டப்பிங் பேச வைத்தார். ஆனால் படம் ரிலீசுக்கு தயாராகி விட் டது. இதுவரைக்கும் ஒரு பிரேமைகூட அவர் கண்ணில் காட்டவில்லை.


இதை நான் அவரை குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. அவர் மனதுக்கள் ஏதோ ஒன்றை நினைத்து அதன்படி முயற்சி செய்து கொண்டேயிருக்கிறார். நானும் அப்படித்தான் முதலில் கதையை மெருகேற்றிக்கொண்டேயிருப்பேன். படப்பிடிப்பு நெருங்கி விட்டது என்று சொல்லும்போதுதான் கதை வேலைகளை முடிப்பேன். பின்னர், படப்பிடிப்பிலும் அப்படித்தான் கதையை மனதில் அசைபோட்டுக்கொண்டு ஏதாவது புதிது புதிதாக யோசித்துக்கொண்டிருப்பேன். ரீ-ரெக்கார்ட்டிங் போறது வரைக்கும் ஏதாவது செய்யலாமா என்று மெருகேற்றிக்கொண்டேயிருப்பேன். அப்படித்தான் இந்த படத்தின் டைரக்டர் செந்தில்குமாரும் என்னைப்போலவே இருக்கிறார்.


மேலும், இந்த படத்தின் இசையமைப்பாளர் சிறப்பாக இசையமத்துள்ளார். முதல் படம் மாதிரியே தெரியவில்லை. ஒளிப்பதிவாளர் ராசாமதி இந்தபடத்துக்கு பிரேம் சிறப்பாக வைத்துள்ளார். இந்த படத்தில் பணியாற்றிய டைரக்டர், கேமராமேன், இசையமைப்பாளர் ஆகியோர் பாகுபாடில்லாமல் அனைத்து வேலைகளையும் செய்தனர். டைரக்டர் செந்தில் முதல் படத்துக்காக எவ்வளவு கஷ்டப்படுனுமோ அவ்வளவு பட்டு விட்டார். அவர் நினைத்த மாதிரி படம் வரவேண்டும் என்பதற்காக இவ்வளவு டயம் எடுத்து பண்ணியிருக்கிறார். இன்றைக்கு இந்த தேசப்பற்று பாடலை பார்க்கையில் உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.


தயாரிப்பாளர் எஸ்.தாணு-


இந்தப்பட இயக்குனரைப் பற்றி எனக்கு பெரிதாக தெரியாது. ஆனால் அவரைப்பற்றி மற்றவர்கள் சொல்லக்கேட்டு இப்படிப்பட்ட இயக்குனர் இருந்தால் இந்த திரையுலகம் செழிக்கும் என்பதை அறிந்தேன். எஸ்.பி.முத்துராமன் சாருக்கு அடுத்தபடியாக நான் ரஞ்சித்தை பார்க்கிறேன். இவர்களெல்லாம் சினிமாவை நேசிப்பவர்கள். கடுமையாக உழைப்பவர்கள். இதன்காரணமாகத்தான் கபாலி படத்திற்கு பிறகு ரஞ்சித் என் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.


என்னுயை பங்களிப்பு இந்த வாய்மை படத்துக்கு இருக்கும். இந்த படத்தில் இருக்கும் இரண்டு பேரை என் கண்களாக நினைக்கிறேன் ஒருவர் சாந்தனு, இன்னொருவர் ராசாமதி. பிரமாதமான எதிர்காலம் இவர்களுக்கு இருக்கு. இந்த ாய்மை படம் வெற்ற பெற்று இவர்கள் பெரிய இடத்துக்கு செல்ல வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.


டைரக்டர் ரஞ்சித்-


சமூக முரணப்பத்தி இது நம்ம ஆளு படத்தில் பாக்யராஜ் சார் சொல்லும்போதே பிரச்சினை வந்தது என்று நினைக்கிறேன். சமூக பிரச்சினையை படமாக்கும் போது எதிர்ப்பு, ஆதரவு இரண்டுமே இருக்கும். அப்படி வரும் ஆதரவை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். கலையில் அரசியல் செய்வது. கலையை அரசியலாக மாற்றுவது. அதை வாய்மையில் செய்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.


இந்த படத்தில் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என அனைவருமே நன்றாக ஒர்க் பண்ணியிருக்கிறார்கள். திரையிடப்பட்ட தேசப்பற்று சம்பந்தமான பாடலை எஸ்.பி.பி.சார் இளமையாக பாடியுள்ளார். வாழ்த்துக்கள். மகிழ்ச்சி. இந்த படம் வெற்றி பெற வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.


பூர்ணிமா பாக்யராஜ்-


இந்த படத்தை இயக்கியுள்ள செந்தில்குமார் பொய்யே சொல்ல மாட்டார் என்கிறார்கள். ஆனால் கடைசி வரை அவர் என்னிடம் கதையே சொல்லவில்லை. எப்போது கேட்டாலும் இதோ சொல்கிறேன் என்பார் ஆனால் சொல்ல மாட்டார். அதேசமயம் ஒவ்வொரு காட்சிகளை பற்றி மட்டும் முழுமையாக சொல்லி, எப்படி நடிக்க வேண்டும் என்பதை அழகாக சொல்வார். அதன்படி நான் நடித் தேன். இப்போது படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஆனால் இப்போது வரை என்னிடம் அவர் கதையை சொல்லவில்லை. பொய்யே சொல்ல மாட்டார் என்று அனைவரும் செந்தில்குமாரை சொல்கிறார்கள். ஆனால் அவர் என்னிடம் கதை சொல்கிறேன் சொல்கிறேன் என்று சொல்லி பொய் சொல்லிவிட்டார்.


மேலும், அவரே தயாரிப்பாளர், டைரக்டர் என இரண்டுமே இருப்பதால் நிறைய டென்சன் இருக்கும். ஆனால் அதை அவர் வெளிக்காட்டிக்கொள்ளவே மாட்டார். சிரித்துக்கொண்டே வேலை வாங்குவார். முதல் படம் டைரக்டர் என்று சொல் ல முடியாத அளவுக்கு ஸ்பாட்டில் படமாக்கினார் என்றார்.


நடிகர் சாந்தனு-


வாய்மை படத்தின் கதையை என்னிடமும் டைரக்டர் ஒரு தோராயமாகத்தான் சொன்னார். ஆனால் நான் இதுவரை நடிக்காத ஒரு புதுமையான கதை. அதனால் எனக்கு கதை பிடித்து விட்டது. இது ஒரு ஸ்ட்ராங்கான கண்டன்ட். யாரு சொன்னா மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று இருக்கு. ஒரு சோசியல் மெசேஜ் சொல்லும் படம். இப்படியொரு விசயம் வந்தால் நல்லா இருக்கும் என்று சொல்லும் படம். இப்படியெரு கண்டன்ட் உள்ள படம் என்பதால் இந்த கருத்தை யார் சொன்னாலும் ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்வார்கள் என்பதால் முழு நம்பிக்கையில் இந்த படத்தில் நடித்துள்ளேன். நான் பயந்த போதும்,உங்க மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்று டைரக்டர் என்னை இந்த படத்தில் நடிக்க வைத்தார்.


மேலும், நான் நடித்துள்ள முப்பரிமாணம் படத்தின் டீசர் கபாலி படத்துடன் உலகமெங்கும் வந்து கொண்டிருக்கிறது. அந்த சப்போர்ட்டை தானு சார் செய்தார். அந்த நன்றியை நான் ஒருநாளும் மறக்க மாட்டேன் என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in