ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் விக்ரம் மகளின் காணாமல் போன மோதிரம் கிடைத்துவிட்டது. அதை கால் டாக்ஸி டிரைவர் ஒருவர் போலீஸில் பத்திரமாக ஒப்படைத்தார்.
நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதா, இவருக்கும் மு.க.முத்துவின் பேரனுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. கடந்த வாரம் இவர்கள் இருவரும் ஆயிரம்விளக்கு காதர் நவாஸ்கான் சாலையில் உள்ள ஐஸ்கிரீம் பார்லர் ஒன்றுக்கு வந்த போது அக்ஷிதா கையிலிருந்த மோதிரம் காணாமல் போனது. பின்னர் இது பற்றி ஆயிரம்விளக்கு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் காணாமல் போன விக்ரம் மகளின் மோதிரத்தை கண்டெடுத்த கால் டாக்சி டிரைவர் ஒருவர் பேப்பரில் விக்ரம் மகள் மோதிரம் காணாமல் போனதை அறிந்து, உடனடியாக விக்ரம் வீட்டிலேயே அதை அளித்துள்ளார். போலீசார் கவனத்துக்கே செல்லாமல் இந்த மோதிரத்தை அவர்களிடம் அளித்துள்ளார். லட்சுமணன் என்ற அந்த கால் டாக்சி டிரைவரின் நேர்மையை பலரும் பாரட்டி வருகின்றனர்.
நிச்சயதார்த்த மோதிரம் என்பதால் அதன் உண்மையான மதிப்பை விட செண்டிமெண்டாக கூடுதல் மதிப்பு கொண்ட மோதிரத்தை கண்டுபிடித்து கொடுத்த கால்டாக்சி டிரைவருக்கு விக்ரம் என்ன கைமாறு செய்ய போகிறார் என்பது தெரியவில்லை.