நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
ஷாலினிக்குப் பிறகு குழந்தை நட்சத்திரமாக தென்னிந்திய சினிமாவில் பெரிய ரவுண்டு வந்தவர் அவரது தங்கை ஷாம்லி. மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த அஞ்சலி படம் சூப்பர் ஹிட்டானது. அந்த படம் அவருக்கு தேசிய விருதினையும் பெற்றுக் கொடுத்தது. அதன்பிறகும் துர்கா உள்ளிட்ட பல படங்கள் அவரை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டு வந்தன. பின்னர் கதாநாயகியாக நடிக்க என்ட்ரியானபோது, ஓரிரு படத்தோடு படிப்பை தொடர சென்று விட்ட ஷாம்லி, தனுஷ் நடித்துள்ள ‛கொடி' படத்தில் முதலில் கமிட்டாகியிருந்தார். ஆனால், பின்னர் அந்த படத்தில் திரிஷாவுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததால் அதிலிருந்து வெளியேறி விக்ரம் பிரபுவின் ‛வீரசிவாஜி' படத்தில் ஒப்பந்தமானார்.
ஆனால் அந்த படத்தில் நடித்து முடித்து விட்ட நிலையில், புதிய படங்கள் எதிர்பார்த்தபடி ஷாம்லிக்கு புக்காகவில்லை. தேடிச்சென்ற சில படங்களின் கதையைக்கேட்டவர் பிடிக்கவில்லை என்று ரிட்டன் பண்ணி விட்டாராம். மேலும் வீரசிவாஜி ரிலீசாகும்போது தனக்கும் பர்பாமென்ஸ் ஸ்கோப் உள்ள படங்கள் கிடைக்கும் என்று காத்திருக்கும் ஷாம்லி, ஏற்கனவே மலையாளத்தில் வள்ளியும் தெட்டி புள்ளியும் தெட்டி -என்ற படத்தில் நடித்தவர் இப்போது சில மலையாள டைரக்டர்களிடம் கதை கேட்டுள்ளாராம். மலையாளத்தில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவமுள்ள படங்கள் அதிகமாக வருவதால் அடுத்தபடியாக -ஷாம்லியின் கவனம் மலையாள சினிமா பக்கம் திரும்பியிருப்பதாக சொல்கிறார்கள்.