வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் |
மலையாளத்தில் சில படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்தவர் ஐஸ்வர்யா மேனன். அப்படி அவர் வந்தபோது எதிர்பார்த்தபடி கதாநாயகி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும் காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யனும் குமாரு, ஆப்பிள் பெண்ணே உள்ளிட்ட சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வந்த அவர், தற்போது கழுகு கிருஷ்ணாவுடன் வீரா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கல்லூரி பெண்ணாக மாடர்ன் கெட்டப்பில் நடித்து வரும் ஐஸ்வர்யா மேனன் இதையடுத்து சில படவாய்ப்புகள் அவரைத் தேடிச் சென்றபோது திருப்பி அனுப்பி விட்டாராம்.
அவரிடம் அதுகுறித்து கேட்டபோது, மலையாள நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் பெரிய இடம் கிடைத்து வருகிறது. அதனால் நானும் பெரிய நடிகையாக வேண்டும் என்றுதான் கோடம்பாக்கத்துக்கு வந்தேன். ஆரம்பத்தில் நான் எதிர்பார்த்தபடி படங்கள் கிடைக்கவில்லை என்றபோதும், இப்போது கழுகு கிருஷ்ணாவுடன் வீரா படத்தில் நடிக்கிறேன். ரொம்ப நல்ல வேடம். அதனால் இதன்பிறகு இன்னும் பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்தால்தான் நான் அடுத்த லெவலுக்கு செல்ல முடியும். அதனால்தான் சில பிரபலமில்லாத ஹீரோக்களின் படங்களில் நடிக்க அழைப்பு வந்தபோது மறுத்து விட்டேன்.
மேலும், சினிமாவைப்பொறுத்தவரை முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தால்தான் பெரிய இடத்துக்கு வர முடியும். இல்லையேல் மூன்றாம்தட்டு நடிகையாகத்தான் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனால்தான் நான் உசாராக செயல்பட்டு வருகிறேன் என்கிறார் ஐஸ்வர்யா மேனன்.