அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
குளோபல் வுட்ஸ் மூவீஸ் சார்பில் வின்செண்ட் அடைக்கராஜ் தயாரித்துள்ள படம் மியாவ். பிரபல விளம்பர பட இயக்குனர் சின்னாஸ் பழனிச்சாமி இயக்கி உள்ளார். இது இந்தியாவிலேயே முதன் முறையாக பெர்சியன் கேட் என்ற வகையைச் சேர்ந்த ஒரு பூனையை மையமாக வைத்து உருவாக்கப்படும் படம். கொஞ்சம் நிஜம். நிறைய அனிமேஷன் கலந்து உருவாகியுள்ளது. படத்திற்கு ஸ்ரீஜித் இடவானோ இசை அமைத்துள்ளார்.
பூனையை 4 இளைஞர்கள் கொடுமைப்படுத்துவார்கள். இதனால் வெகுண்டெழும் பூனை நான்கு பேரையும் திரும்பவும் கொடுமைப்படுத்துவதுதான் கதை. பூனை எப்படி கொடுமைப்படுத்தும் அந்நியன் அம்பி மாதிரி மல்டிபிள் பெர்சனாலிட்டியாக மாறும். பூனையை தவிர ஹீரோ, ஹீரோயின்கள், காமெடி நண்பர்கள் எல்லாம் படத்தில் உண்டு. காதலும் உண்டு. அதனால் 4 பாடல்களும் உண்டு. பூனைக்கும் டூயட் பாடல் உண்டு.
இந்த பாடல்களின் வெளியீட்டு விழா நடந்தது. நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார் பின்னர் அவர் கூறியதாவது: "இதுவரை பூனையை நான் நேரில் தான் பார்த்து இருக்கிறேன். இப்போது தான் இந்த மியாவ் படம் மூலம் திரையில் பார்க்கிறேன். இந்நாள் வரை யாரும் எடுக்காத முயற்சியை எடுத்திருக்கும் தயாரிப்பாளர் வின்சென்ட் அடைக்கலராஜ் மற்றும் இயக்குனர் சின்னாஸ் பழனிசாமி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்தில் செல்பி எனப்படும் பூனையின் சேட்டைக்கு அளவே இல்லை. நிச்சயமாக இந்த மியாவ் படம் குழந்தைகளை மட்டுமின்றி எல்லா தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவரும்." என்றார் சிவகார்த்திகேயன்.