‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
காதலுக்கு கோட்டை கட்டிய தேவயானி சினிமா மார்க்கெட் குறைந்ததும் சின்னத்திரை பக்கம் தாவினார். அவர் நடித்த கோலங்கள் தொடர், சின்னத்திரை வரலாற்றில் பல சரித்திர சாதனைகளை படைத்தது. அதன் பிறகும் பல சீரியல்களில் நடித்தார். சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய முதல் நடிகை தேவயானி தான்.
சீரியலில் நடித்தால் டைட்டில் கேரக்டரில் தான் நடிப்பேன் என்பதில் பிடிவாதமாக இருந்ததாலும் சம்பள விஷயத்தில் இறங்கி வராததாலும் அவருக்கு சீரியல் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. சினிமாவில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக மாறினார். அதிலும் பெரிய வரவேற்பு இல்லை. தற்போது மலையாள சேனல்கள் பக்கம் தாவி உள்ளார். ஏற்கெனவே பல மலையாளப் படங்களில் நடித்து புகழ்பெற்ற தேவயானி, தற்போது அங்குள்ள சேனல்களின் லைவ் ஷோக்களில் சிறப்பு அழைப்பாளராகவும், நடுவராகவும் கலந்து கொள்கிறார். இதற்காக அடிக்கடி கேரளா பறந்து செல்கிறார்.
சொந்த தயாரிப்பில் ஒரு மலையாள சீரியல் தயாரித்து அதில் நடிக்கும் முடிவில் இருக்கிறார். இதற்காக அவர் அங்குள்ள பிரபல சேனலுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் மலையாள தொடரை தயாரித்து நடிப்பது உறுதி என்று தெரிகிறது.