'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
பழம்பெரும் இயக்குனர் பி.ஆர்.பந்துலவின் ஒரே மகள் பி.ஆர்.பி.விஜயலட்சுமி. இவர்தான் ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர். பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமாரிடம் உதவியாளராக இருந்து ஒளிப்பதிவை கற்றுக் கொண்டார். அப்போது சுஹாசினியும் அசோக்குமாரிடம் ஒளிப்பதிவாளராக இருந்தார். சுஹாசினி நடிகையானபோதும் விஜயலட்சுமி மட்டும் நடிக்க வந்த வாய்ப்புகளை உதறிதள்ளிவிட்டு ஒளிப்பதிவாளர் ஆனார்.
விஜயலட்சுமி ஒளிப்பதிவு செய்த முதல் படம் கே.பாக்யராஜின் சின்ன வீடு. அதன் பிறகு தமிழ் மற்றும் மலையாளத்தில் பல கமர்ஷியல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜயலட்சுமி பாட்டுப் பாடவா என்ற படத்தையும் இயக்கினார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஹீரோவாக நடித்தார். இளையராஜா இசை அமைத்தார். பிரபல சவுண்ட் என்ஜினீயர் சுனில்குமாரை திருமணம் செய்ததும் ஒளிப்பதிவை விட்டு விலகி குடும்ப வாழ்க்கைக்கு திரும்பினார் விஜயலட்சுமி. தற்போது சரிகம நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட்டாக பணியாற்றி வருகிறார்.
விஜயலட்சுமிக்கு பிறகு பெண் ஒளிப்பதிவாளர்கள் அவ்வளவாக வரவில்லை. பவுசியா போன்று ஒரு சிலரே வந்தார்கள். அவர்களும் நெடுநாள் தாக்குபிடிக்கவில்லை. விஜயலட்சுமி விட்டுச்சென்ற இடம் காலியாகவே இருக்கிறது.