பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
முதன் முறையாக சமஸ்கிருத மொழியில் தி லெஜெண்ட் ஆப் புண்ணியகோடி என்ற அனிமேஷன் படம் தயாராக இருக்கிறது. ஐ.டி.துறையில் பணியாற்றும் ரவிசங்கர் இயக்குகிறார். இளையராஜா இசை அமைக்கிறார். இதன் துவக்க விழா நேற்று நடந்தது. இதில் நடிகை ரேவதி உள்ளிட்ட படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். படத்தின் முக்கிய கேரக்டரான புண்ணியகோடி என்ற பசுமாட்டிற்கு ரேவதி டப்பிங் குரல் கொடுக்கிறார். இதற்காக அவர் சமஸ்கிருத மொழி உச்சரிப்பு பயற்சி பெற்று வருகிறார்.
இதுபற்றி படத்தின் இயக்குனர் ரவி சங்கர் கூறியதாவது: இப்படம் உண்மையை மட்டும் பேசும் ஒரு பசுவின் கதை. மனிதனின் பேராசையால் இயற்கைக்கு உருவாகும் தீங்கை பொழுது போக்கு விஷயங்களோடு சேர்த்து கூறும் புதுமையான ஒரு படைப்பு . இப்படத்தின் மூல கதை மகாபாரத காவியத்தில் இருந்து எடுக்கப்பட்டது. கருநாடு என்னும் கிராமத்தில் உண்மையை மட்டும் உரைத்து வாழும் ஒரு பசு மாடு வாழ்ந்து வந்தது. ஒரு நாள் புண்ணியகோடி என்னும் அந்த பசு மாட்டை ஒரு புலி பிடித்துவிடுகிறது. அப்போது புண்ணியகோடி புலியிடம் - நான் என் கன்றுக்கு பால் கொடுக்க வேண்டும் ஆதலால் என்னை விடுவிக்க வேண்டும், என் கன்றுக்கு பால் கொடுத்த பிறகு நான் திரும்பி வருகிறேன் என்று கேட்கிறது. பிறகு புண்ணிய கோடி தன் கன்றின் பசியாறிய பின்பு மீண்டும் புலியிடம் செல்கிறது. தப்பித்து செல்ல வாய்ப்பிருந்தும் திரும்ப வந்த புண்ணியகோடியின் நேர்மையை கண்டு அந்த புலி புண்ணியகோடியை கொல்லாமல் விட்டு செல்கிறது. இதுதான் படத்தின் கதை.
இப்படத்தில் உள்ள கருத்து அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். சமஸ்கிருதம் 5000 வருடம் பழமையான மொழியாகும். அதை அழியாமல் பாதுகாக்கும் பணி நம்முடையது.
இப்படத்தின் வெற்றி மேலும் இதை போன்ற படங்களை உருவாக்க ஒரு ஊன்றுதலாக அமையும் என்றார். இந்த முயற்சிக்கு உதவ துபாயில் வாழும் ஓவியர் திருமதி ஷெரின் அப்ரஹாம் ஒரு கலை கண்காட்சி செய்ய முடிவெடுத்துள்ளார். இதில் இவர் செய்த இருபதிற்கும் மேற்பட்ட ஓவியங்கள் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளது. இந்த ஓவியங்களின் விற்பனையால் வரும் தொகையை புண்ணியகோடியின் தயாரிப்புக்கு கொடுக்கப்போவதாக ஷெரின் அறிவித்துள்ளார். இந்த கண்காட்சி சென்னை ஆள்வார்பேட்டையில் உள்ள ஆர்ட் ஹௌஸ் அரங்கில் ஆகஸ்ட் 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெறவுள்ளது. ஒரு படம் தயாரிக்க ஓவியர்கள் ஒருங்கிணைவது இது முதன்முறையாகும். என்றார் ரவிசங்கர்.