நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
அருந்ததி படத்திற்கு பின்னர் அனுஷ்கா, வாள் வீசி ராணியாக நடித்த திரைப்படம் ருத்ரமாதேவி. இப்படத்தை ஆஸ்கர் விருதிற்கு இந்தியன் பிலிம் பெடரேஷன் பரிந்துரைத்துள்ளது. சிறந்த வெளிநாட்டு படம் என்ற பிரிவின் கீழ் ருத்ரமாதேவி ஆஸ்கர் விருதிற்கான போட்டியில் கலந்து கொள்ளவுள்ளது. இதனை ருத்ரமாதேவி படத்தின் இயக்குனர் குணசேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் பொரும்பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவான இத்திரைப்படம், ருத்ரமாதேவி எனும் தெலுங்கு தேச ராணியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் விதமாக உருவாக்கப்பட்டது. அனுஷ்காவுடன் அல்லு அர்ஜூன், ராணா, பிரகாஷ்ராஜ் நித்யா மேனன், கேத்ரின் தெரஸா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த ருத்ரமாதேவி திரைப்படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த லாபம் ஈட்டவில்லை எனினும் விமர்சக ரீதியாக வெற்றி பெற்றது. தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.