தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கௌதம் மேனன், சிம்பு கூட்டணி இணைந்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' படம் இன்றும் இளைஞர்கள் ரசிக்கும் படமாக இருந்து வருகிறது. அந்தக் கூட்டணி மீண்டும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் இணைந்த போது மீண்டும் ஒரு இளமைத் திருவிழா வரப் போகிறது என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்ததால் 'அச்சம் என்பது மடமையடா' படத்தை சிம்புவின் அனுமதியுடன் அப்படியே போட்டுவிட்டு போய்விட்டார் கௌதம். மீண்டும் படத்தை ஆரம்பித்து பரபரப்பாக படப்பிடிப்பு நடத்த ஆரம்பித்தார் கௌதம்.
படத்தின் சிங்கிளான 'தள்ளிப் போகாதே...' ஆறு மாதம் முன்பே வெளியாகி, இதுவரை 1 கோடியே 82 லட்சம் பேரால் யு டியூபில் ரசிக்கப்பட்டுள்ளது. மற்ற பாடல்களும் இளம் ரசிகர்களை கவர்ந்து கொண்டிருக்க, கிளைமாக்ஸ் படப்பிடிப்பு நெருங்கும் சமயத்தில் சம்பள பாக்கி விஷயத்தில் கௌதமுக்கும், சிம்புவுக்கும் மோதல் ஏற்பட்டது. இருந்தாலும் பிரச்சனையை மேலும் வளரவிடாமல் கௌதம் சமாதானப் பேச்சுவார்த்தையில் இறங்கினார் என்று கூறப்பட்டது. 'தள்ளிப் போகாதே...' பாடலை இன்னும் படமாக்கவில்லை என்று கௌதம் வெளிப்படையாகத் தெரிவித்தார். அத்தனை பேரைக் கவர்ந்த பாடல் தற்போது படமாகியதா இல்லையா என்பது ரகசியமாகவே இருக்கிறது.
இதனிடையே, படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டதாகவும், இன்றிலிருந்து சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு படம் தமிழ், தெலுங்கில் வெளியாகும் என நேற்று கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். அப்படி பார்த்தால் 'அச்சம் என்பது மடமையடா' படம் செப்., 9ம் தேதி வெளியாகும் என தெரிகிறது. 'அச்சம் என்பது மடமையடா' கௌதமைக் காப்பாற்றுகிறதோ இல்லையோ சிம்புவைக் காப்பாற்றியே ஆக வேண்டும்.