தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குனர் மிஷ்கின் தனது லோன் வுல்ஃப் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் எழுதி, தயாரித்து, வில்லனாக நடிக்கும் படம் சவரக்கத்தி. இயக்குனர் ராம், பூர்ணா ஹீரோ, ஹீரோயின். இப்படத்தை அவரது இளைய சகோதரரும், உதவியாளருமான ஜி. ஆர் ஆதித்யா இயக்குகிறார்.
இந்தப் படத்தில். "தங்கக் கத்தி, வெள்ளிக் கத்தி, செம்புக் கத்தி, இரும்புக் கத்தி, சவரக் கத்தி ஈடாகுமா...' என்று தொடங்கும் பாடலை அரோல் கொரேலியின் இசையில் மிஷ்கின் எழுதி, பாடியிருக்கிறார். இதனை பார்பர் கீதம் என்று அழைக்கிறார்கள். கடந்த 4ந் தேதி இணையதளத்தில் வெளியான இந்தப் பாடல் வைரலாகி உள்ளது. சவரக்கத்தியின் பெருமை கூறும் இந்தப் பாடலில் பொதுமக்களுடன் விஷால் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் தோன்றி உள்ளனர்.
“தமது சவரக்கத்தியை பயன்படுத்தி நமக்கு தோற்றப் பொலிவை தருவதற்காக உழைக்கும் பார்பர் சகோதரர்களுக்காக இப்பாடலை சமர்ப்பிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சவரக்கத்தியைப்போல் கூர்மையான பல கத்திகளை மனிதன் மனிதனுக்கு எதிராக உலகம் முழுவதும் பயன்படுத்துகிறான். இந்திய வரலாற்றில் பார்பர் சகோதர்களுக்காக சமர்ப்பணம் செய்யப்படும் முதல் பாடலை உருவாக்கி வெளியிட்டதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்” என்கிறார் இயக்குநர் ஜி.ஆர் ஆதித்யா.