ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
1971ம் ஆண்டு வெளிவந்த படம் ரிக்ஷாக்காரன். மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் மஞ்சுளா, அசோகன், தேங்காய் சீனிவாசன், மேஜர் சுந்தர்ராஜன், மனோகர், சோ, பத்மினி, ஆகியோர் நடித்திருந்தார்கள். கிருஷ்ணன் நாயர் இயக்கி இருந்தார், எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். எம்.ஜி.ஆருக்கு சிறந்த நடிகருக்கான பாரத் பட்டத்தை பெற்றுக் கொடுத்த படம்.
இந்தப் படத்தை தற்போது பிலிம் விஷன் நிறுவனத்தின் உரிமையாளர்கள் பி.மணி, டி.கே.கிருஷ்ணகுமார் ஆகியோர் டிஜிட்டல்படுத்தி உயர்தொழில்நுட்ப ஒலி வடிவத்துடன் அகன்ற திரையில் வெளியிட இருக்கிறார்கள். அதற்கு முன்பாக ரிக்ஷாக்காரன் பாடல்களை பிரமாண்ட விழா நடத்தி மறு வெளியீடு செய்ய இருக்கிறார்கள்.
"அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு...", "அழகிய தமிழ் மகள் இவள்...", "கடலோரம் வாங்கிய காற்று...", "பம்பை உடுக்கை கட்டி..." என காலத்தால் அழிக்க முடியாது பாடல்களை எம்.எஸ்.விஸ்வநாதன் உருவாக்கி இருந்தார் இப்போது அவைகள் நவீன ஒலி அமைப்புடன் மீண்டும் வெளிவருகிறது.
வருகிற 21ந் தேதி சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் மாலை 6 மணிக்கு பாடல் வெளியீட்டு விழா நடக்கிறது. படத்தின் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் தலைமை தாங்குகிறார். திரைப்பட நடிகர் நடிகைள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.