ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு திரை உலகின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இன்று(ஆகஸ்ட் 9) தனது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றார். மகேஷ் பாபுவின் ரசிகர்களும் நண்பர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் வாஸ்கோடகாமா படத்தில் நடித்து வரும் மகேஷ் பாபு அடுத்ததாக பிவிபி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.
இதனை மகேஷ் பாபுவின் பிறந்த நாளான இன்று பிவிபி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. பிவிபி நிறுவனத்தின் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இப்படத்தை இயக்கவுள்ளார். ஏற்கனவே மகேஷ் பாபு நடித்த பிரம்மோற்சவம் படத்தை பிவிபி நிறுவனம் தயாரித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அப்படம் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் மீண்டும் மகேஷ் பாபு படத்தை அந்நிறுவனம் தயாரிக்கவுள்ளது.