விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகா இன்று தன்னுடைய 25வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். ஹிந்தித் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா, 2011ம் ஆண்டு வெளிவந்த 'மாப்பிள்ளை' படம் மூலம் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இடம் பிடித்தார். விஜய், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, ஜீவா, விஷால், சிவகார்த்திகேயன், சித்தார்த் உள்ளிட்ட பல இளம் கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
தமிழில் அதிக வாய்ப்புகள் தொடர்ந்து வந்ததையடுத்து தெலுங்கில் படங்களைக் குறைத்துக் கொண்டார். தற்போது ஜெயம் ரவியுடன் 'போகன்' படத்தில் மட்டும் நடித்து வரும் ஹன்சிகா மீண்டும் தெலுங்குப் பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பியுள்ளார்.
நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த ஓவியராகவும் பெயர் பெற்றவர் ஹன்சிகா. மும்பையில் பல ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து அவர்களுக்காக தனி இல்லம் ஒன்றைக் கட்டும் முயற்சியில் இருக்கிறார். கடந்த வருடம் சென்னையில் மழை வெள்ளம் வந்து பாதிப்படைந்த போது இளம் முன்னணி நடிகர்கள் கூட செய்யாத நிதியுதவியை மனமுவந்து அளித்தவர் ஹன்சிகா என்பது குறிப்பிடத்தக்கது.
ஹன்சிகா இன்று பிறந்த நாளைக் கொண்டாடுவதை முன்னிட்டு அவருக்கு தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். ஹன்சிகாவுடன் ஒரு காலத்தில் காதலில் இருந்த சிம்புவும் வாழ்த்து தெரிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். அதற்கு நன்றி என ஹன்சிகாவும் பதிலளித்து அவரும் மீண்டும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். தமிழ் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்துள்ள ஹன்சிகாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.