'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
புதுமுகங்கள் அஸ்வின்-வர்ஷா- நடன மாஸ்டர் ராஜூசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ள படம் யானும் தீயவன். பிரசாந்த் ஜி.சேகர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். ஜெரோம் புஷ்பராஜ் தயாரித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடை பெற்றது. இந்த விழாவில், கே.ஆர்., அருண்பாண்டியன், அம்மா கிரியேசன்ஸ் சிவா, பிரபுதேவா, ராஜூசுந்தரம், ஆர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் ஆர்யா பேசுகையில், இந்த படத்தின் தயாரிப்பாளரான ஜெரோம் புஷ்பராஜ் நான் நடித்த முதல் படமான உள்ளம் கேட்குமே படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டபோது வழக்கறிஞராக வந்தார். பேசி பிரச்சினையை தீர்த்து வைத்து படம் வெளியாவதற்கு உதவி செய்தார். அப்போதில் இருந்தே அவரை எனக்குத் தெரியும். அந்த நட்பு காரணமாகத்தன் இந்த படவிழாவில் நான் கலந்து கொண்டேன்.
மேலும், இந்த படத்தில் அஸ்வின் நாயகனாக அறிமுகமாகிறார் அவருக்கு என் வாழ்த்துக்கள். ஆனால் இந்த படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தபோது ராஜூ சுந்தரம் மாஸ்டரை அதிரடி வில்லனாக காண்பித்திருப்பதைக்கண்டு ஆச்சர்யமாக இருந்தது. அதோடு அவரை 22 கொலைகள் செய்த குற்றவாளியாக காட்டுகிறார்கள். நிஜவாழ்க்கையில் எப்போதுமே ஜாலியாக சிரித்துக்கொண்டிருக்கும் அவர், ஒரு வார்த்தை கூட சத்தமாக பேசமாட்டார். ஒரு குழந்தை மாதிரியான கேரக்டர். ஒரு சின்ன ஈயை கொல்வதற்குகூட பயப்படுவார். அப்படிப்பட்ட வரை இந்த படத்தில் டெரராக காட்டியிருக்கிறார்கள். ஆனால் அவரும் தனது சுயகேரக்டரில் இருந்து மாறி, ஒரு மார்க்கமாத்தான் நடித்திருக்கிறார். அதனால் ராஜூ மாஸ்டரின் வில்லத்தனமான நடிப்பை பார்க்க நானும் ஆவலாக இருக்கிறேன் என்றார்.
ராஜூசுந்தரம் பேசும்போது, இந்த படத்திற்கு என்னை வில்லனாக நடிக்கக்கேட்டு வந்தபோது, காமெடி வில்லனா என்று கேட்டேன். இல்லை சார் அதிரடியான சீரியஸ் வில்லன் என்றார்கள். அதைக்கேட்டு, நான் செட்டாவேனா என்றேன். எனக்கு நம்பிக்கை இருக்கு சார் என்று டைரக்டர் சொன்னார். ஆக, என்னை நான் நம்புவதை விட அவர் என்மீது வைத்திருந்த நம்பிக்கைக்காக இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன்.
மேலும், முதலில் இந்த படத்தில் என்னை நடிக்க கேட்டு வந்தபோது, நிறைய நாள் கால்சீட் கேட்டார்கள். ஆனால், கொஞ்ச நாளிலேயே எனக்கான போர்ஷனை முடித்து விட்டார்கள். சீக்கிரமே இந்த படத்தில் நடித்து முடித்து விட்டது போன்ற பீல் எனக்கு ஏற்பட்டது என்றார்.