விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
பழம்பெரும் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி(வயது 68) காலமானார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். பிரபலங்களின் அஞ்சலிக்கு பின்னர் மாலையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
ஜோதிலட்சுமி பழம்பெரும் இயக்குனர், தயாரிப்பாளர் டி.ஆர்.ராமண்ணாவின் உறவினர். பெரிய இடத்து பெண் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அடிமைப்பெண், தேடிவந்த மாப்பிள்ளை, ரிக்ஷாக்காரன், நீரும் நெருப்பும், லட்சுமி கல்யாணம் எதிரொலி உள்பட இந்திய மொழிகள் அனைத்திலும் 400 படங்களுக்குமேல் நடித்துள்ளார். ஹீரோயினாக நடித்தாலும் பெரும்பாலான படங்களில் கவர்ச்சி நடனம் ஆடினார்.
1970-களில் கறுப்பு வெள்ளை கால தமிழ் சினிமா தொடங்கி இன்றைய நவீன காலம் வரை சினிமா, சின்னத்திரை என அழகாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஜோதிலட்சுமி. ஜோதிலட்சுமியின் கவர்ச்சி நடனத்திற்காகவே படங்கள் ஓடி வெற்றி பெற்றுள்ளன.
‛முத்து படத்தில் ‛‛கொக்கு சைவ கொக்கு... மற்றும் விக்ரமின் ‛சேது படத்தில் ‛‛கான கருங்குயிலே... பாடல்களுக்கு ஜோதிலட்சுமி போட்ட ஆட்டத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. இந்த வயதிலும் இப்படி ஆட்டம் போடுகிறாரே என்று இளசுகளையே வியக்க வைத்தவர்.
இன்றைக்கும் அதே அழகோடு சீரியல்களில் நடித்து வந்தார். ரத்த புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தும் அதைப் பற்றியே சுவடே எதுவும் இன்றி சீரியல்களில் நடித்து வந்தார். வள்ளி சீரியல்களில் அவர் அணியும் புடவைகளுக்கு இல்லத்தரசிகள் ரசிகைகளாக மாறியுள்ளனர். ஒவ்வொரு எபிசோடிலும் ஜோதிலட்சுமியை பார்க்கவே வள்ளி சீரியல் பார்த்தவர்கள் உள்ளனர்.
பிரபலங்கள் அஞ்சலி : சென்னை தி.நகரில் வசித்து வந்த ஜோதிலட்சுமி, ரத்த புற்றுநோயின் தீவிரம் அதிகரிக்கவே, நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு டி.ராஜேந்தர், நாசர், லலிதா குமாரி, கோவை சரளா, அம்பிகா, சங்கர் கணேஷ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
ஜோதிலட்சுமிக்கு சாய்பிரசாத் என்ற கணவரும், ஜோதிமீனா என்ற மகளும் உள்ளனர். அவரும் சினிமாவில் பல படங்களுக்கு நடனமாடினார்.
உடல் தகனம் : திரையுலக பிரபலங்கள், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, சென்னை, கண்ணம்மாபேட்டையில் வைத்து தகனம் செய்யப்பட்டது.