ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
என்னதான் திறமையும், அழகும் இருந்தாலும் நடித்த முதல் படம் ஹிட்டாகவில்லை என்றால் அதில் நடித்த நடிகைக்கு அடுத்த படம் கிடைப்பது அபூர்வம். கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த மாலை நேரத்து மயக்கம் படத்தில் நடித்தவர் வாமிகா. அந்தப் படத்தில் பலவந்தமாக கணவனால் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண்ணின் உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் படம் தோல்வி அடைந்ததால் வாமிகா கவனிக்கப்படாத நடிகையாகிவிட்டார்.
ஆரம்பத்தில் இந்தி படங்களில் சிறு சிறு கேரக்டர்களில் நடித்தவர் தன் சொந்த மொழியான பஞ்சாபியில் ஹீரோயினாக நடித்தார். மாலை நேரத்து மயக்கம் படத்திற்கு பிறகு வாய்ப்பு இல்லால் இருந்தவர் இப்போது மலையாளத்தில் கோதா என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். குஞ்சிராமாயணம் படத்தை இயக்கிய பாசில் ஜோசப் இயக்கும் படம். டுவினோ தாமஸ் ஹீரோ. ஹீரோயினை சுற்றி நடக்கிற கதையம்சம் கொண்ட படம். தமிழில் நடிக்கும் வாய்ப்பையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் வாமிகா.