ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சசிகுமார் நடித்த வெற்றிவேல் படத்தில் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகை நிகிலா விமல். அந்த படத்தில் மூன்று ஹீரோயினிகளில் ஒருவராக நடித்திருந்தார் நிகிலா. கதைப்படி சசிகுமாரின் மனைவியாக குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்த நிகிலா, அதையடுத்து சசிகுமார் நடித்துள்ள கிடாரி படத்தில் சிங்கிள் ஹீரோயினாக நடித்துள்ளார். வெற்றிவேல் படத்தில் ரசிகர்களை பெரிதா கவராத நிகிலாவுக்கு இந்த படத்தில் வெயிட்டான நாயகி வேடம் என்பதால், பல காட்சிகளில் அழுத்தமான பர்பாமென்ஸை வெளிப்படுத்தியிருக்கிறாராம். அதனால், கிடாரி தமிழில் தனக்கு பெரிய இடத்தை பிடித்து தரும் என்ற நம்பிக்கை நிகிலா வுக்கு அதிகமாகி விட்டதாம்.
அதனால், அடுத்தபடியாக தாய்மொழியான மலையாளத்தில் நடிப்போம் என்ற ஆசை எதுவும் இல்லாமல் தமிழில் புதிய படங்களில் நடிப்பதற்காக தீவிரமாக அவர் கதை கேட்டு வருகிறார் நிகிலா. அந்த வகையில், புதிய மலையாள வரவு நடிகைகளான மஞ்சிமா மோகன், அனுபமா, மடோனா வரிசையில், நிகிலாவும் கோடம்பாக்கத்தில் வேகமாக வளரத் தொடங்கியிருக்கிறார். மேலும், வெற்றிவேல் படத்திற்கு பிறகு மா.க.பா.ஆனந்துடன் பஞ்சு மிட்டாய், ஒன்பது குழி சம்பத் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் நிகிலா. அந்த படங்களும் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றன.