'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டில் ஹீரோக்களுக்கு இணையான சம்பளத்தை எட்டிப் பிடித்துள்ளனர் பாலிவுட் நடிகைகள். இதில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் தீபிகா படுகோனே. அவர் தற்போது நடித்து வரும் ராணி பத்மாவதி படத்தில் நடிக்க 12 கோடியே 65 லட்சம் சம்பளம் பெற்றிருக்கிறார். ஹாலிவுட் படமான டிரிபிள் எக்ஸ் படத்தில் நடிப்பதை தொடர்ந்து சம்பளத்தில் நான்காவது இடத்தில் இருந்த தீபிகா முதல் இடத்திற்கு வந்துவிட்டார்.
குயின் படத்திற்கு பிறகு கங்கணா ரனவத்தின் சம்பளம் 10 கோடிக்கு மேல் உயர்ந்து விட்டது. தனது அடுத்த படத்திற்கு அவர் 11 கோடி சம்பளம் பெறுகிறார். தமிழ்படமான தாம்தூம் படத்தில் நடிக்க கங்கணா வாங்கிய சம்பளம் 10 லட்சம். 9 முதல் 10 கோடி சம்பளத்துடன் கரீனா கபூர் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். 8 முதல் 9 கோடி சம்பளத்துடன் பிரியங்கா சோப்ரா 4வது இடத்தில் இருக்கிறார். நவீன நடிகையர் திலகம் வித்யா பாலன் 6 முதல் 7 கோடி வரை வாங்கி 5வது இடத்தில் இருக்கிறார். அனுஷ்கா சர்மா, ஆலியா பட், சோனாக்ஷி சின்ஹா ஸ்ரத்தா கபூர் ஆகியோர் அடுத்த 5 இடத்தை பிடித்திருக்கிறார்கள். தென்னிந்தியாவில் நயன்தாரா 3 கோடியுடன் முதல் இடத்தில் இருக்கிறார். பாலிவுட் முன்னணி நடிகர்கள் 10 கோடி முதல் 30 கோடி வரை சம்பளம் பெறுகிறார்கள். அவர்கள் இடத்தை இப்போது நடிகைகள் பிடித்து வருகிறார்கள்.