ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பெண் கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. கல்லூரி மாணவிகள் அதிகம் கலந்து கொண்ட இந்த போட்டியின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினரான நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளருமான விஷால் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விஷால், நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக படம் எடுக்கவில்லை. முன்னணி நடிகர்களை வைத்து ஒரு படம் எடுத்து, அதில் கிடைக்கும் நிதியை வைத்து நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட உள்ளோம். இது தொடர்பான முக்கியமான அறிவிப்பு தீபாவளி தினமான அக்டோபர் 29 அன்று வெளியிடப்பட உள்ளது. நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் அமைப்பது எப்படி எங்களின் நீண்ட நாள் கனவோ, அதே போன்று நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாளைய ஆசை. இது மிகவும் முக்கியம். இந்த மணிமண்டபத்தை கட்ட தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். மணிமண்டபம் கட்டுவதில் தமிழக அரசுடன், எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்ய உள்ளோம் என்றார்.