டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஷாலின் கத்திச்சண்டை படத்தில் மீண்டும் காமெடியனாக நடித்துள்ளார் வடிவேலு. இந்த படத்தில் முதல் பாதியில் சூரியும், இரண்டாவது பாதியில் வடிவேலுவும் காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார்களாம். மேலும், இதையடுத்து வடிவேலு பல படங்களில் காமெடியனாக நடித்து வருவதாக கூறப்பட்டபோதும், அவரது தரப்பில் விசாரித்தால் வடிவேலு, அடுத்தபடியாக இம்சை அரசன்-2 படத்தில் கதாநாயகனாக நடிப்பதாக மட்டுமே சொல்கிறார்கள்.
மேலும், ஏற்கனவே ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவரான வடிவேலு, மதுரையிலுள்ள தனது சொந்த ஊரில் ஏதாவது கோயில் விசேஷம் என்றால் குடும்பத்துடன் அங்கு பறந்து விடுகிறாராம். அதோடு, சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது அலுவலகத்தில் சரஸ்வதி சிலை வைத்திருக்கிறார். எல்லோரும் வீட்டு வரவேற்பறையிலோ அல்லது வாசல் அருகிலோ விநாயகர் சிலை வைத்திருக்க வடிவேலுவோ, புதுமையான முறையில் சரஸ்வதி சிலையை வைத்திருக்கிறார். தினமும் அந்த சிலைக்கு பூஜை செய்யப்படுவதோடு, சரஸ்வதியை வணங்கி விட்டு வெளியே செல்வதை வழக்கத்தில் வைத்திருக்கிறாராம் வடிவேலு.