டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கன்னட திரையுலகில் முன்னணி நடிகரான சுதீப் தற்போது கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகும் படத்தில் நடித்துள்ளார். தமிழில் 'முடிஞ்சா இவன புடி' என்றும் கன்னடத்தில் 'கோட்டிகோபா-2' என்றும் பெயர்சூட்டப்பட்டுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இந்தப்படத்தில் நித்யா மேனன் நடிக்க ஒப்பந்தம் ஆனதில் இருந்தே நடிகர் சுதீப்புடன் நெருக்கம் காட்டி வருகிறார்.. இவர்கள் இருவருக்குள்ளும் காதல் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் சுதீப் தன்னுடைய மிகச்சிறந்த நண்பர் என நித்யா கூறினாலும், இவர்கள் காதலை உறுதிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு பேட்டியிலும் சுதீப்பை பற்றி ஏதாவது புகழ்ந்து கூறிக்கொண்டுதான் இருக்கிறார் நித்யா மேனன். தான் ஒரு படத்தை இயக்கினால் அதில் நிச்சயம் சுதீப் தான் ஹீரோவாக இருப்பார் என ஓப்பனாகவே சொல்கிறாராம் நித்யா மேனன். ஒவ்வொருமுறை சுதீப்பை பார்க்கும்போதும் அவருக்கான ஒரு கேரக்டரை எழுதத்தான் தூண்டுகிறாராம் சுதீப்..
அதேசமயம் மற்ற நடிகர்களை பார்க்கும்போது இந்த எண்ணம் அவருக்கு ஏற்படுவதில்லையாம். மற்றவர்களை உற்சாகப்படுத்துவதில் எப்போதும் ஆர்வம் காட்டுபவர் சுதீப் என்றும், அவரிடம் இரண்டு மூன்று கதைகளை நித்யா மேனன் கூறியதாகவும் அதில் ஏதாவது ஒன்றை படமாக இயக்க நித்யா மேனன் விரும்பினால் அதில் தானும் பங்களிப்பு செய்ய தயாராக இருப்பதாகவும் கூறினாராம் சுதீப். யார் கண்டது விரைவில் அப்படி ஒரு அறிவிப்பை நித்யா மேனன் வெளியிட்டாலும் வெளியிடலாம்.