வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ரம்மி ஐஸ்வர்யா ராஜேஷ், விஜயசேதுபதிக்கு ஜோடியாக சில படங்களில் நடித் தார். இப்போது தர்மதுரையில் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். அவர் தவிர, விதார்த், சிபிராஜ், அட்டகத்தி தினேஷ், அருள்நிதி, உதயநிதி என மூன்றாம் தட்டு ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். மேலும், முக்கியத்துவம் வாய்ந்த கதாநாயகி என்றில்லாமல் சிறிய கேரக்டர்களில் நடிக்க அழைத்தாலும் அவர் மறுப்பதில்லை. நாலு சீன் நச்சுன்னு இருந்தாலும் போதும் என்று சொல்லி கமிட்டாகி விடுகிறார்.
அந்த வகையில், தமிழில் கைநிறைய படங்கள் வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்தியில், டாடி படத்தில் நடிப்பதை அடுத்து மலையாளத்தில் நிவின்பாலியுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். ஆக, தமிழில் முன்னணி கதாநாயகி என்கிற இடத்துக்கு வராமலேயே பரவலாக நடிக்கத் தொடங்கிவிட்டார். இதைப்பார்த்து சிலர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு இந்திய நடிகை என்கிறார்கள். அந்த அளவுக்கு எந்த மொழிப்படமாக இருந்தாலும் கதாபாத்திரங்களுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு நடிக்கும் திறமை அவரிடம் இருக்கிறது என்று பெருமையாக பேசி வருகிறார்கள்.
இதுபற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், என்னை இந்திய நடிகை என்று கூறுவதைக் கேட்கையில் சந்தோசமாக உள்ளது. ஆனால், இந்த பெயரை காப்பாற்ற வேண்டும் என்கிற பயமும் உள்ளது. அதனால், சின்ன படம், பெரிய படம் என்கிற பாகுபாடு பார்க்காமல் எந்த வேடமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்து வருகிறேன் என்கிறார்.