தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து விட்டு பரத் நடித்த முனியாண்டி விலங்கியம் மூன்றாமாண்டு படத்தில் தமிழுக்கு வந்தவர் பூர்ணா. அப்போது, அவரைப்பார்த்த பலரும் அடுத்த அசின் என்று சொன்னதால், தமிழில் அசின் விட்டுச் சென்ற இடத்தை பிடித்து விட வேண்டும் என்று அதிக நம்பிக்கையுடன் நடித்து வந்தார் பூர்ணா. ஆனால் அவர் நடித்த எந்த படங்களும் வெற்றிபெறவில்லை. அதனால் அருள்நிதி நடித்த தகராறு படத்தில் நெகடீவ் ஹீரோயினியாகவும் நடித்தார். அந்த படமும அவருக்கு ஒர்க்அவுட்டாகவில்லை.
இதனால் தமிழ் சினிமா மீதான நம்பிக்கையை இழந்த பூர்ணா, தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் கவனத்தை திருப்பியிருந்தார். இந்த நிலையில், தற்போது விசு இயக்கத்தில் எஸ்.வி.சேகர் நாயகனாக நடித்த மணல்கயிறு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகனாக எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின் சேகர் நடித்து வருகிறார். மணல்கயிறு படத்தில் நடித்த விசு, எஸ்.வி.சேகர் உள்பட அந்த படத்தில் நடித்த பல கேரக்டர்கள் இந்த படத்திலும் தொடருகிறார்கள்.
மணல்கயிறு-2 பற்றி அஸ்வின் சேகர் கூறுகையில், மணல்கயிறு முதல் பாகத்தில் தனக்கு வரப்போற வருங்கால மனைவி இந்த மாதிரி இருக்க வேண்டும் என்று பத்து கண்டிசன்களை போடுவார் எஸ்.வி.சேகர். ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் ஒரு மாற்றம். அதாவது, இந்த படத்தில் தனக்கு வரப்போகிற கணவர் இப்படி இப்படி இருக்க வேண்டும் என்று பூர்ணா பத்து அதிரடியான கண்டிசன்களை போடுவார். அப்படிப்பட்ட அவரிடம் ஒரு பெரிய பொய்யை சொல்லி, ஹீரோ அவளை கல்யாணம் செய்து கொள்கிறான். அதையடுத்து அவளிடம் சிக்கி ஹீரோ சந்திக்கும் விளைவுகள்தான் இந்த மணல்கயிறு-2 படத்தின் கதை என்று கூறும் அஸ்வின் சேகர், இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற கதையில் குடும்ப சூழலில் இந்த படம் தயாராகியிருக்கிறது என்கிறார்.