இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
குறுகிய காலத்தில் பணம் பண்ணுவது எப்படி எனற வித்தையைக் கற்று வைத்திருக்கும் இளம் ஹீரோ சிவகார்த்திகேயன். அவரைப்போலவே பணம் சம்பாதிப்பதை கற்று வைத்துள்ள இயளம் இயக்குநர் அட்லிதான். அவரது இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து வெற்றியைப் பெற்றது தெறி படம். இந்தப் படத்திற்குப் பிறகு அஜித்திடம் கதை சொல்லும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் அட்லி.
அவரது அடுத்த படத்தின் ஹீரோ யார் சஸ்பென்ஸ் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் சத்தமில்லாமல் நிவின் பாலியுடன் கை கோர்த்திருக்கிறார். ஆனால், இயக்குநராக அல்ல, தயாரிப்பாளராக. ஏ ஃபார் ஆப்பிள் புரொடக்ஷன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கிய இயக்குநர் அட்லி, தற்போது, ஜீவா கதாநாயகனாக நடிக்கும் சங்கிலி புங்கிலி கதவத் தெற என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
அப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் நிறைவடைந்ததுசங்கிலி புங்கிலி கதவத் தெற படப்பிடிப்பு முடிந்த கையோடு, தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அட்லி. அறிமுக இயக்குநர் சூர்யா பாலகிருஷ்ணன் என்பவர் இயக்கவிருக்கும் இப்படத்தில் மலையாள ஹீரோ நிவின் பாலி காநாயகனாக நடிக்கிறார்.