பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தில்லுக்குத்துட்டு படத்தை அடுத்து சர்வர் சுந்தரம் படத்தில் நடிக்கும் சந்தானம், அதையடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். பின்னர், கண்ணா லட்டு தின்ன ஆசையா-2வில் நடிக்கிறார். இந்த படங்களை முடித்ததும் அவர் ஹாலிவுட் பாணியில் ஒரு படத்தில் நடிக்கப்போகிறாராம். புதுமுக இயக்குனர் பச்சயப்பன் ராஜா என்பவர் இயக்கும் அந்த படத்தில் படம் முழுக்க சந்தானத்துடன் ஒரு புலியும் நடிக்கிறதாம்.
ஆனால் அப்படி அவருடன் நடிக்கப்போவது நிஜமான புலி இல்லையாம். கிராபிக்ஸ் புலியாம். சில ஆண்டுகளாக புலிகள் பற்றிய ஆராய்ச்சியை செய்த பிறகு இந்த கதை உருவாகியுள்ளதாம். மேலும், இப்படத்தின் புலி கிராபிக்ஸ் பணிகள், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் நடைபெற உள்ளதாம். அந்த வகையில், புலி கிராபிக்ஸ்க்கு மட்டுமே பல கோடிகளை செலவு செய்யப்போகிறார்களாம். தில்லுக்குத்துட்டு படத்தின் மெகா வசூல் காரணமாக சந்தானம் நடிக்கும் படங்கள் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகின்றன.