மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சிலமணி நேரத்துக்கு முன்புதான் இயக்குனர் பிரதாப் போத்தன் மலையாளத்தில் தான் இயக்கவிருந்த துல்கர் சல்மான் படம் கைவிடப்பட்டதற்கான காரணத்தை சொல்லியிருந்தார்.. குறிப்பாக அவர் தனது படத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதிய இயக்குனர் அஞ்சலி மேனனை பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருந்தார். அவர் எழுதிய திரைக்கதை சரியில்லாததால் தான் அந்தப்படத்தை கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறியிருந்தார். இந்தநிலையில் இதற்கு அஞ்சலி மேனன் ஒரே வாக்கியத்தில் பிரதாப் போத்தனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
“இதுபோன்ற அவதூறுகளுக்கு நான் மதிப்பு கொடுத்து பொருட்படுத்த வேண்டியதில்லை” என சிம்பிளாக பதில் சொல்லி ஒதுங்கிக்கொண்டு விட்டார். ஆனால் மலையாள திரையுலகில் பலரும் பிரதாப் போத்தனை நாகரிகம் தெரியாதவர் என்றே சொல்கின்றனர்.
கடந்த ஒரு வருடத்திலேயே அவர் ஜெயாராமுடன் சண்டை போட்டது, இளையராஜாவுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழா இசைநிகழ்ச்சியை விமர்சித்தது, ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் மீது குற்றம் சாட்டியது என தனக்கு பழக்கமான நண்பர்கள் மீதே இதுபோன்று பகிரங்கமாக குற்றம் சாட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.. இதை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் கூறுகின்றனர்.