தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கின்றார். வாஸ்கோடகாமா என தற்சமயம் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் நாயகியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றார். இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க மகேஷ் பாபுவின் மனைவி நம்ரதாவிடம் இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளாராம். நம்ரதாவும் இயக்குனரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகின்றது.
மகேஷ் பாபுவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை நம்ரதா தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் நடிப்பிற்கு டாட்டா காட்டிவிட்ட நம்ரதா, குழந்தைகள் குடும்பம் என செட்டிலாகிவிட்டார். அவ்வப்போது திரைப்பட விழாக்களில் மகேஷ் பாபுவுடன் ஜோடி சேர்ந்து கலந்துகொள்ளும் நம்ரதா மகேஷ்பாபுவின் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை கவனித்துக் கொள்கின்றார்.
இந்நிலையில் வாஸ்கோடகாமா படத்தில் நம்ரதாவை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க இயக்குனர் முருதகாஸ் தீவிரமுயற்சி செய்து வருகின்றார். நம்ரதா சிறப்பு தோற்றத்தில் நடித்தால் அதுவே ஒரு வகையில் படத்திற்கு விளம்பரமாக இருக்கும் என முருகதாஸ் கணக்கிட்டுள்ளார். அவரது திட்டம் பலிக்குமா என விரைவில் தெரிந்துவிடும்.