'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சராசரி மக்களுக்கு சொந்த வீடு ஒரு வாழ்நாள் கனவு. வசதி படைத்தவர்களுக்கு போர்ட் கிளப் ஏரியாவில் பங்களா வாங்குவது கனவு. இன்னும் வசதியானவர்களுக்கு கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு பார்ம் ஹவுஸ் கட்டுவது கனவு. அதுபோல பிரபல நடிகர்களுக்கு துபாய் கடலுக்கு நடுவில் பங்களா வாங்குவது கனவு.
துபாயில் கடலை மேடாக்கி ஈச்ச மரத்தின் வடிவில் ஒரு நகரை உருவாக்கி இருக்கிறார்கள். இங்கு வீடு வாங்கி குடியிருந்தால் பூமியிலேயே சொர்க்கத்தை அனுபவிக்கலாம் என்கிறார்கள். மோகன்லால், மம்முட்டி, ஸ்ரீதேவி, ஷாருக்கான், சல்மான்கான் ஆகியோருக்கு அங்கு எற்கெனவே பங்களா உள்ளது. இப்போது ஐஸ்வர்யாராயும் அங்கு ஒரு பங்களாவை வாங்கி உள்ளார்.
பிரமாண்ட நீச்சல்குளம், சுற்றிலும் ஈச்ச மரம். மினி தியேட்டர், பெரிய உடற்பயிற்சிக்கூடம், தியானகூடம், 9 படுக்கை அறைகள், ஒரு மீட்டிங்ஹால், ஒரு வரவேற்பு ஹால் கணினிமயமாக்கப்பட்ட பாதுகாப்பு வசதி இத்தனை வசதிகளும் கொண்ட இந்த வீட்டின் மதிப்பு 54 கோடி ரூபாய். இது ஐஸ்வர்யாராயின் ஒரு வருட வருமானம். ஏற்கெனவே கணவருடன் தனிக்குடித்தனத்தை ஐஸ்வர்யா வற்புறுத்தி வரும் நிலையில் அவரின் இந்த தனி வீடு குடும்பத்துக்குள் லேசான புகைச்சலையும் கிளப்பி இருப்பதாகச் சொல்கிறார்கள்.