மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சராசரி மக்களுக்கு சொந்த வீடு ஒரு வாழ்நாள் கனவு. வசதி படைத்தவர்களுக்கு போர்ட் கிளப் ஏரியாவில் பங்களா வாங்குவது கனவு. இன்னும் வசதியானவர்களுக்கு கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு பார்ம் ஹவுஸ் கட்டுவது கனவு. அதுபோல பிரபல நடிகர்களுக்கு துபாய் கடலுக்கு நடுவில் பங்களா வாங்குவது கனவு.
துபாயில் கடலை மேடாக்கி ஈச்ச மரத்தின் வடிவில் ஒரு நகரை உருவாக்கி இருக்கிறார்கள். இங்கு வீடு வாங்கி குடியிருந்தால் பூமியிலேயே சொர்க்கத்தை அனுபவிக்கலாம் என்கிறார்கள். மோகன்லால், மம்முட்டி, ஸ்ரீதேவி, ஷாருக்கான், சல்மான்கான் ஆகியோருக்கு அங்கு எற்கெனவே பங்களா உள்ளது. இப்போது ஐஸ்வர்யாராயும் அங்கு ஒரு பங்களாவை வாங்கி உள்ளார்.
பிரமாண்ட நீச்சல்குளம், சுற்றிலும் ஈச்ச மரம். மினி தியேட்டர், பெரிய உடற்பயிற்சிக்கூடம், தியானகூடம், 9 படுக்கை அறைகள், ஒரு மீட்டிங்ஹால், ஒரு வரவேற்பு ஹால் கணினிமயமாக்கப்பட்ட பாதுகாப்பு வசதி இத்தனை வசதிகளும் கொண்ட இந்த வீட்டின் மதிப்பு 54 கோடி ரூபாய். இது ஐஸ்வர்யாராயின் ஒரு வருட வருமானம். ஏற்கெனவே கணவருடன் தனிக்குடித்தனத்தை ஐஸ்வர்யா வற்புறுத்தி வரும் நிலையில் அவரின் இந்த தனி வீடு குடும்பத்துக்குள் லேசான புகைச்சலையும் கிளப்பி இருப்பதாகச் சொல்கிறார்கள்.