ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'கபாலி' படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு 'கபாலி' படம் வெளிவருவதற்கு முன்பு அவைகள் இணையதளத்தில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 'கபாலி' படத்தை வெளியிட 169 இணையதளங்களுக்கு நீதிமன்றம் தடைவிதித்தது. ஆனால் இந்த தடையையும் மீறி இணையதளத்தில் படம் வெளியானது. அந்த இணையதளத்தை நடத்துகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் வழக்கு தொடர்ந்தார் தாணு. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிமன்ற உத்தரவை மீறி இணையதளங்களில் எப்படி படம் வெளிவந்தது என்பதை மத்திய அரசு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். திருட்டு விசிடியும், இணையதள வெளியீடும் வரக்காரணம் என்ன என்பதை அரசு ஆராய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன், கபாலி படம் பற்றியும் சில கருத்துக்களை கூறினார். அவற்றின் சுருக்கம் வருமாறு:
'கபாலி' படம் பல நூறு கோடிகள் வசூலித்ததாக கூறுகிறார்கள். இதனால் அந்த படத்தை தயாரித்த நிறுவனம் பெரிய நிறுவனம் என்று கருத வேண்டியுள்ளது. மத்திய அரசின் கம்பெனி சட்டத்தின்படி பெரு நிறுவனங்கள் சமுதாய பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அதன்படி 'கபாலி' படத்தின் வருமானத்தில் ஒரு பகுதியை சமுதாய நலனுக்காக செலவிட வேண்டும். இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கவும் நீதிமன்றம் தயார் என்றார்.
கபாலி தயாரிப்பாளர் ஏற்கெனவே சமூகநல பணிகளை செய்து வருகிறார். 'கபாலி' படத்தின் மூலம் கிடைத்த வருவாயிலும் சமூக நலப் பணிகள் செய்யப்படும் என்றார் தாணுவின் வழக்கறிஞர்.