இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
லிங்குசாமி இயக்கிய ரன் படத்தில் காதல் பிசாசே என்ற பாடல் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் பாடலாசிரியர் யுகபாரதி. அதைத் தொடர்ந்து
விஜய்யின் புதிய கீதையில் வசியக்காரி, திருடா திருடியில் மன்மதராசா, சந்திரமுகியில் கொஞ்ச நேரம் என பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதிய யுகபாரதி, தற்போது முன்னணி பாடலாசிரியர்கள் பட்டியலில் இடம்பிடித்து விட்டார். அதோடு, சுசீந்திரன் இயக்கும் மாவீரன் கிட்டு என்ற படத்தில் முதன்முறையாக அவர் வசனம் எழுதுகிறார்.
இதுபற்றி யுகபாரதி கூறுகையில், இதுவரை நான் எந்த படத்திற்கும் வசனம் எழுதியதில்லை. பாடல்களில் மட்டுமே எனது முழுக்கவனமும் இருந்தது. இந்த மாவீரன் கிட்டு படத்தில் வசனம் எழுதுமாறு டைரக்டர் சுசீந்திரன் கேட்டுக்கொண்டதால் எழுதி வருகிறேன். இப்படம் 1980-களில் நடக்கும் கதைக்களத்தில் உருவாகிறது. அதனால் அந்த காலகட்டத்தில் வழக்கில் இருந்த தமிழ் சொற் களை அதிகமாக பயன்படுத்தியிருக்கிறேன். அந்த வகையில், படங்களுக்கு வசனம் எழுதுவதும் ஒரு புதிய அனுபவமாகத்தான் உள்ளது.
மேலும், நான் முழுப்பாடல்களையும் எழுதிய ஜோக்கர் படம் விரைவில் திரைக்கு வருகிறது. இது ஒருவகையான அரசியல் படம். இந்த சமூகத்துக்கு தேவையான படம். இந்த மாதிரியான படங்கள் தமிழ் சினிமாவுக்கும், தமிழ் மக்களுக்கும் தேவையானவை. நான் பாடல் எழுதி திருப்தி கொடுத்த பல படங்களில் இந்த ஜோக்கர் படமும் ஒன்று. முழுக்க முழுக்க கமர்சியல் கதைகளுக்கு பாடல்கள் எழுதி வரும் வேளையில், இதுபோன்று சமூக நோக்கமுள்ள கதைகளுக்கு பாடல் எழுதுவது படைப்பாளிகளுக்கு மனதளவில் திருப்தியை கொடுக்கிறது என்கிறார் யுகபாரதி.