மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
டைரக்டர் கவுதம் மேனனும், நடிகர் ஜீவாவும் இணையும் புதிய படத்திற்கு நித்யா என பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் சமந்தா. பாணா காத்தாடி மூலம் அறிமுகமாகி, விண்ணைத் தாண்டி வருவாயாவில் கடைசி நேரத்தில் வரும் முக்கிய கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்தான் நடிகை சமந்தா. தமிழில் இன்னும் சரியான இடத்தைப் பிடிக்க முடியவில்லையே என தவிக்கும் சமந்தாவுக்கு மிகப் பெரிய வாய்ப்பாக இந்தப் படம் உள்ளது.
கோ படத்தைத் தயாரித்த ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் தயாரிக்கும் இப்படம் வரும் 2012ல் வெளியாகவிருக்கிறது. மனோஜ் பரமஹம்ஸா ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ராணாவுக்கான பாடல்கள் அனைத்தையும் ரஹ்மான் முடித்துக் கொடுத்துவிட்டதால், இப்போது புதிய படங்களை தமிழில் ஒப்புக் கொள்ள ஆரம்பித்துள்ளார் ரஹ்மான். அப்படி ஒப்புக் கொண்ட முதல் படம் இதுதான். வரும் 29ம்தேதி சென்னையில் நித்யாவின் சூட்டிங் தொடங்கவிருக்கிறது.